கடைசி நாளில் கசிந்தது தகவல்.. இந்தவாரம் வெளியேறும் போட்டியாளர் இவர்தானாம்.. யார் தெரியுமா?
கடைசி நாளில் கசிந்தது தகவல்.. இந்தவாரம் வெளியேறும் போட்டியாளர் இவர்தானாம்.. யார் தெரியுமா?
இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து எந்த போட்டியாளர் வெளியேறியுள்ளார் என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.
16 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் சீசன் நான்கு தற்போது 13 வாரங்களை நிறைவு செய்து இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. வழக்கமான சீசன்களை போல் இந்தமுறையும் சண்டை, சமாதானம், அழுகை என விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கிறது.
நிகழ்ச்சியில் இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி, சுசித்ரா, சம்யுக்தா,சனம் ஷெட்டி, ஜித்தன் ரமேஷ், நிஷா, அர்ச்சனா மற்றும் கடந்த வாரம் அனிதா சம்பத் ஆகியோர் வெளியேறியுள்ளனர். இந்நிலையில் இந்த வாரம் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட ஆஜீத், சோம், கேப்ரில்லா, ஷிவானி, ரம்யா ஆகியோர் நாமினேட் ஆகியிருந்தனர்.
இவர்களில் கேப்ரில்லா காப்பாற்றப்படுவதாக கமல் நேற்றைய நிகழ்ச்சியில் தெரிவித்திருந்தார். இதனை அடுத்து இந்த வாரம் யார் வெளியேற போவது என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் எழுந்து வந்தநிலையில் இந்த வாரம் குறைவான வாக்குகள் பெற்று பாடகர் ஆஜித் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.