"கணவர் இறந்தபிறகு என்னை தவறாக தொடர்புபடுத்தி பேசுகின்றனர்" கண்கலங்கிய மீனா.!?
உதைக்க காலை தூக்கிய சனம்! கடுப்பாகி சீறி வந்த பாலாஜி! எல்லைமீறி ரணகளமான பிக்பாஸ் வீடு!
உதைக்க காலை தூக்கிய சனம்! கடுப்பாகி சீறி வந்த பாலாஜி! எல்லைமீறி ரணகளமான பிக்பாஸ் வீடு!
விஜய் தொலைக்காட்சியில் 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் சீசன் 4 நாளுக்கு நாள் வாக்குவாதங்கள், மோதல்கள், அன்பு, அக்கறை, காதல், பஞ்சாயத்து என எதற்கும் பஞ்சமில்லாமல் விறுவிறுப்பாக சென்று கொண்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் நிகழ்ச்சி தொடங்கிய இரண்டாவது வாரத்தில் முதன்முறையாக நடிகை ரேகா வெளியேற்றப்பட்டார். அதனைத் தொடர்ந்து கடந்த வாரம் ஆஜித் குறைவான வாக்குகளைப் பெற்று வெளியேறுவார் என எதிர்பார்த்த நிலையில், எவிக்ஷன் ப்ரீபாஸை வைத்து தப்பித்தார். மேலும் வார இறுதியான நேற்று வேல்முருகன் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
மேலும் வைல்ட் கார்ட் என்ட்ரியில் புதிய போட்டியாளராக பாடகி சுசித்ரா கலந்துகொண்டுள்ளார்.
#Day29 #Promo2 of #BiggBossTamil #பிக்பாஸ் - தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/6UPfGQaDog
— Vijay Television (@vijaytelevision) November 2, 2020
இந்த நிலையில் இன்று வெளியான இரண்டாவது ப்ரமோவில் சனம் ஷெட்டி பாலாஜியை எட்டி உதைக்க காலை தூக்கியுள்ளார். இதனால் கோபமான பாலாஜி சனத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். இதனால் இருவருக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டுள்ளது. மேலும் கைகலப்பாக மாறும் அளவிற்கு சென்றுள்ளது. இதனால் பிக்பாஸ் வீடு முழுவதும் ரணகளமாக மாறியுள்ளது.