நடிகர் மனோஜின் மனைவியும் ஹீரோயினா?? அவரோட அழகான குடும்பத்தை பார்த்தீங்களா!!
பிக்பாஸ் அழுமூஞ்சி அபிராமியா இது! செம ஹேப்பியாக யாரை பார்த்துள்ளார் தெரியுமா? வைரலாகும் கியூட் புகைப்படம்!!

பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி 50 நாட்கள் கடந்த நிலையில் மிகவும் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. 16 பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் பாத்திமா பாபு, வனிதா, மோகன் வைத்யா, மீரா, ரேஷ்மா, சரவணன்,சாக்ஷி என 7 போட்டியாளர்கள் கடந்த நாட்களில் வெளியேற்றப்பட்டனர். அதனை தொடர்ந்து வைல்டுக்கு கார்டு எண்ட்ரியாக நடிகை கஸ்தூரி பிக்பாஸ் வீட்டிற்கு வந்தார்.
பின்னர் விருந்தினராக வனிதா மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார். அவர் வந்ததுமே தனது வேலையை துவங்கினார். போட்டியாளர்களை பற்றி குறை கூறினார் . பின்னர் முகேன் குறித்து அபிராமியிடம் தவறாக கூறியதை கூறியதை தொடர்ந்து அபிராமி மற்றும் முகேனுக்கு இடையே பெரும் பிரச்சினை வெடித்தது. இவ்வாறு பிக்பாஸ் நிகழ்ச்சி பரபரப்பாக சென்றுகொண்டிருந்த நிலையில் குறைந்த வாக்குகளை பெற்று அபிராமி வீட்டை விட்டு வெளியேறினார்.
இதனைதொடர்ந்து பிக்பாஸ் வீட்டில் எப்பொழுதுமே அழுதுகொண்டே இருக்கும் அபிராமி பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின் மிகவும் மகிழ்ச்சியாக தன்னுடன் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட பிற போட்டியாளர்களை சந்தித்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் அவர் மோகன் வைத்யா மற்றும் சாக்ஷி ஆகியோரை நேரில் சந்தித்துள்ளார்.
இந்நிலையில் அவர் நேற்று பிரபல நடன இயக்குனர் சாண்டியின் வீட்டிற்கு சென்று அவரது குழந்தையை சந்தித்துள்ளார். மேலும் சாண்டியின் மனைவி மற்றும் குழந்தையுடன் புகைப்படம் எடுத்துள்ளார். அந்த புகைப்படத்தை அபிராமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இன்று நமது பிக்பாஸ் லாலா நாள் என பதிவிட்டு வெளியிட்டுள்ளார்.