பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் கவின்! கண்ணீர் விட்டு அழும் சாண்டி - வெளியான புதிய ப்ரோமோ.



Big boss 3 today promo

பிக்பாஸ் சீசன் 3 மிகவும் விறுவிறுப்பாக இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்துகொண்டு இருக்கின்றது. 16 போட்டியாளர்கள் கலந்துகொண்ட நிலையில் தற்போது 6 பேர் மட்டுமே விளையாடி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று பிக்பாஸ் 5 லட்சம் ரூபாயை பெற்று கொண்டு யார் வெளியே போக விரும்புகிறீர்கள் என்று கேட்டார். அதற்கு கவின் நான் தயார் என்று கூறினார். அத்துடன் நேற்றைய எபிசோட் முடிவடைந்தது.

தற்போது வந்த புதிய ப்ரோமோவில் கவின் உண்மையாகவே வீட்டை விட்டு வெளியேவது போன்று சாண்டியிடம் பேசுகிறார். சாண்டி அழுது கொண்டே இன்னும் 10 நாட்கள் தான் இருக்கிறது ஏன் செல்கிறாய் என்று கேட்கிறார். அதற்கு கவின் இதுவரை இருந்தது போது என்ற அளவுக்கு பேசுகிறார்.