தனது வீட்டு ரகசியத்தை முதன் முறையாக அனைவர் முன்னிலையிலும் கூறிய கமல்! அப்படி என்ன கூறினார் தெரியுமா.



Big boss 3

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ். தற்போது பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் இறுதி நாள் கொண்டாட்டம் இன்று மாலை 6 மணிக்கு துவங்கியது. 

அதன்படி நடிகர் கமல் அவர்கள் நிகழ்ச்சியை துவங்கினார். துவங்கியதும் முதலில் பார்வையாளர்களிடம் உறையாடினார். அதில் ஒரு சில விஷயங்களை கூறினார்.

kamal

அதில் ஒன்று இரண்டு தம்பதிகள் தங்கள் காதல் திருமண அனுபவத்தைப் பகிர்ந்தனர். அதன் பிறகு ஒரு குழந்தை தனது தந்தை வேலை முடிந்து தாங்கள் தூங்கிய பிறகு தான் வீடு திரும்புவார் என புகார் செய்யவே அக்குழந்தைக்கு தந்தையரின் நிலமையை விளக்கி சமாதானம் செய்த கமல் தனது மகாநதி படக் காட்சி ஒன்றையும் உதாரணமாகச் சொன்னார்.

அடுத்து சாண்டி மாஸ்டரின் கலாய்ப்பு குறித்து ஒருவர் பேசினார். அதற்கு கமல் ஆமாங்க மத்தவங்களைக் கலாய்க்கிறப்ப கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கணும். குறிப்பா பெண்கள் கிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்கனும். என்னோட சொந்த அனுபவத்துல சொல்றேன். என்னோட அண்ணியை ஒருமுறை என்ன அண்ணி இவ்வளவு குண்டாயிட்டீங்கன்னு கேட்டதுக்காக அவங்க என்கிட்ட ஆறுமாசமா பேசாம இருந்தாங்க என்று எச்சரிக்கயுடன் சொன்னார்.