நடிகர் கமல்ஹாசனால் தர்ஷனுக்கு கிடைத்த பிரமாண்ட வாய்ப்பு - கண்ணீருடன் நன்றி கூறிய தர்ஷனின் தாய்!
நடிகர் கமல்ஹாசனால் தர்ஷனுக்கு கிடைத்த பிரமாண்ட வாய்ப்பு - கண்ணீருடன் நன்றி கூறிய தர்ஷனின் தாய்!
பிக்பாஸ் சீசன் 3 நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருவது அனைவருக்கும் தெரியும். மேலும் 100 ஒரே வீட்டிற்குள் எந்த வித வெளி உலக தொடர்பும் இன்றி போட்டியாளர்கள் இருக்க வேண்டும்.
அதன் படி இறுதி நாளான இன்று நடிகர் கமல் அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு டைட்டிலில் விருதினை வழங்கினர். அதன் படி தர்ஷனுக்கும் ஒரு விருது வழங்கப்பட்டது.
அது என்னவெனில் அனைத்திலும் சிறந்தவர் என்ற விருது வழங்கப்பட்டது. அதுமட்டுமின்றி கமல் அவர்கள் தனியாக ஒரு சிறப்பு விருதினை வழங்கினார். அதாவது கமல் நடத்தும் ராஜ்கமல் பிலிம்ஸில் தர்ஷன் ஒப்பந்தம் ஆகிவிட்டதாக கூறியுள்ளார்.
அதாவது மற்ற நடிகர்களை வைத்து படம் எடுக்கும் வெகு சில நடிகர்களின் நிறுவனங்களில் தன்னுடைய நிறுவனமும் ஒன்று என கமல் கூறினார். இதனை பார்த்த தர்ஷனின் தாய் ஆனந்த கண்ணீர் சிந்தினார். மேலும் நடிகர் கமல் மற்றும் தமிழ்நாட்டு மக்களுக்கும் நன்றி கூறினார்.