தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் திடீர் மறைவு.! சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!!
NO OTHER LAND: சிறந்த ஆவணப்படமாக இஸ்ரேல் - பாலஸ்தீனம் போரை மையப்படுத்திய நோ அதர் லேண்ட் தேர்வு.. ஆஸ்கர் விருதுகள் 2025 அறிவிப்பு.!

கடந்த 2023 அக்டோபர் 23 அன்று இஸ்ரேல் நாட்டின் மீது திடீரென பாலஸ்தீனியம் படையெடுத்து சென்றது. இந்த தாக்குதலை இஸ்ரேல் தரப்பு சற்றும் எதிர்பார்க்கவில்லை என்பதால், முதலில் சேதம் ஏற்பட்டது. சுமார் 1500 இஸ்ரேலியர்கள் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். பலர் பிணையக்கைதியாக பிடித்து செல்லப்பட்டனர்.
பாலஸ்தீனியம் நாட்டின் ஹமாஸ் படைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த இஸ்ரேல் அரசு, பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் உத்தரவின் பேரில், பாலஸ்தீனத்திற்கு எதிராக போர் தொடுத்துச் சென்றது. இஸ்ரேல் போருக்குள் நுழைந்ததும், போரின் தீவிரம் தலைகீழாக மாறி பாலஸ்தீனிய மக்கள் கொல்லப்பட்டனர். மேலும், ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவர்கள் தேடித்தேடி கொல்லப்பட்டனர்.
"No Other Land" director Basel Adra: "We call on the world to take serious actions to stop the injustice and to stop the ethnic cleansing of Palestinian people." | #Oscars pic.twitter.com/NzoqLKiBSJ
— Variety (@Variety) March 3, 2025
இதையும் படிங்க: கண்ணுக்கு தெரியாத சக்தி கடவுள்ன்னா? இதையும் ஒத்துக்கிட்டு தான் ஆகணும்.! - நடிகர் ஆதி.!
அண்டை நாடுகளில் பதுங்கி இருந்த ஹமாஸ் அமைப்பின் தலைவர்களையும், இஸ்ரேல் நாடு எல்லை தாண்டி சென்று கொன்று பழிதீர்த்தது. எஞ்சிய பிணையக்கைதிகளை விடாத வரை போர் ஓயாது என தொடருகிறது. அவ்வப்போது பிற நாடுகளின் ஒத்துழைப்பின் பேரில் தற்காலிக போர் நிறுத்தம், பிணையக்கைதிகள் பரிமாற்றம் நடக்கிறது. எனினும், பாலஸ்தீனியம் எழுந்து வர பல தசாப்தங்கள் தேவைப்படும் அளவு பேரழிவு அம்மண்ணில் நிகழ்ந்துள்ளது.
தன்னிடம் உரிய படைபலம் இன்றி, பிற நாடுகள் கொடுக்கும் தைரியத்தில் முன்னேறி சென்றால் எந்த மாதிரியான விளைவு ஏற்படும் என்ற விசயத்திற்கு உதாரணமாக பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பு விளங்கிவிட்டது. போரை அவர்கள் தொடங்கி தாக்குதல் நடத்தினாலும், பதிலுக்கு சில நாட்கள் தாக்குதல் நடத்திவிட்டு போரை முடிவுக்கு கொண்டு வரும் எண்ணத்தில் இஸ்ரேலும் இல்லாமல், விடாப்பிடியாக போர் தொடர்ந்து மக்கள் பல்லாயிரக்கணக்கில் உயிரிழந்து வருகின்றனர்.
இந்நிலையில், இஸ்ரேல் - பாலஸ்தீனம் போரை மையப்படுத்தி எடுக்கப்பட்ட நோ அதர் லேண்ட் (No Other Land) திரைப்படம், சிறந்த ஆவணப்படத்திற்கான ஆஸ்கர் விருதை வென்றுள்ளது. இரண்டு நாடுகளுக்கும் இடையேயான பிரச்சனையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படத்தில், அமைதியான வழியில் இரண்டு நாடுகளும் முன்னேற வேண்டும் என முக்கியத்துவம் அலைக்கப்பட்ட காட்சிகள் இடம்பெற்றன. இதனால் நோ அதர் லேண்ட் திரைப்படம் சிறந்த ஆவணப்படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
Congratulations to NO OTHER LAND, this year's Best Documentary Feature Film! #Oscars pic.twitter.com/VHY12iych9
— The Academy (@TheAcademy) March 3, 2025
இதையும் படிங்க: பாக்கியலட்சுமி சீரியலில் கோபி செய்த செயலால் கோபியை வெளுத்து வாங்கும் பாக்கியா! வைரல் ப்ரோமோ வீடியோ காட்சி...