விஜயகாந்தின் உடல்நிலை குறித்து பயில்வான் ரங்கநாதன் அதிர்ச்சி தகவல்.. இதுதான் உண்மையா?.!

விஜயகாந்தின் உடல்நிலை குறித்து பயில்வான் ரங்கநாதன் அதிர்ச்சி தகவல்.. இதுதான் உண்மையா?.!



Bayilvan ranganathan speech about vijayakanth

 

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அமெரிக்காவுக்கு சென்று சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த் தொடர்ந்து குடும்பத்தினரின் பராமரிப்பில் இருந்து வருகிறார். மேலும் பெரும்பாலான நேரத்தை வீட்டில் ஓய்வு எடுத்தவாரே அவர் கழித்து வரும் நிலையில், அவ்வப்போது தனது மனைவி மற்றும் மகனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகும்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்துக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். அவரின் உடல்நிலை தொடர்பாக பிரேமலதா விஜயகாந்த் அவ்வப்போது வீடியோ பதிவிட்டு வதந்திகளை பரப்ப வேண்டாம் என்றும், அதனை நம்ப வேண்டாம் என்றும் தெரிவிப்பார்.

cinema news

பயில்வான் ரங்கநாதன் விஜயகாந்த் உடல்நிலை தொடர்பாக பேசுகையில், "பெப்சி தலைவர் ஆர்.கே செல்வமணி விஜயகாந்த் அவர்களை பார்க்க சென்றபோது, அவருக்கு தொற்று வந்து விடும் என மருத்துவமனை நிர்வாகம் திருப்பி அனுப்பியது. அவ்வாறு இருக்க இவர்கள் மட்டும் எப்படி விஜயகாந்துடன் நின்று புகைப்படம் எடுக்க இயலும். 

தேமுதிக தொண்டர்களை ஆறுதல் படுத்த ரசிகர்களை சாந்தபடுத்த முன்னதாக எடுக்கப்பட்ட புகைப்படத்தை பிரேமலதா தற்போது பகிர்ந்து வருகிறார். ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த சமயத்தில் சசிகலாவை தவிர அவரை பார்க்க வேறு யாரும் அனுமதி செய்யப்படவில்லை. அதே நிலை தான் இங்கும். 

cinema news

விஜயகாந்த் குடும்பத்தினர் தவிர பிறர் பார்க்க அனுமதி இல்லை. அவரின் நிலை என்ன? என்பது குடும்பத்திற்கு மட்டும்தான் தெரியும். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளியை புகைப்படம் எடுக்க மருத்துவமனை நிர்வாகம் அனுமதிக்காது. கேமராவில் இருக்கும் கதிர்கள் நோயாளியை பாதிக்கும் என்றும் கூறுவார்கள். இவை பழைய புகைப்படங்கள் தான்" என தெரிவித்துள்ளார்.