BiggBoss: ஜனனி வெளியேறியதற்கு அமுதவாணனே காரணம் - அசீம் பரபரப்பு குற்றசாட்டு..!

BiggBoss: ஜனனி வெளியேறியதற்கு அமுதவாணனே காரணம் - அசீம் பரபரப்பு குற்றசாட்டு..!


Azeem speech about janani

 

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியானது தனது இறுதிக்கட்டத்தை நெருங்கிக்கொண்டு இருக்கிறது. இன்று பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் தங்களின் 83ம் நாளை கடந்து பயணம் செய்கின்றனர். 

இப்போட்டியில் அமுதவாணன் - ஜனனி ஆகியோர் நண்பர்களாக இருந்து வந்த நிலையில், இறுதியில் பல சச்சரவுகள் ஏற்பட்டன. இதற்கிடையில், வீட்டில் மாஸ்டர்பீஸாக வலம்வரும் அசீம், அமுதவாணனை ஜனனியின் வெளியேற்றத்தின்போது கண்டித்து இருந்தார். 

BiggBoss 6

சனிக்கிழமையான இன்று கமல் ஹாசனின் முன்பும் ஜனனியின் வாய்ப்பை அமுதவாணன் பறித்து கொடுத்துள்ளார். அதற்காக அமுதவாணனுக்கு பறித்து கொடுக்கும் வாய்ப்பை வழங்குகிறேன் என அசீம் கொடுக்கிறார். அப்போது, இருவருக்கும் இடையே வாதம் நடக்கிறது. 

வாதத்தின் இறுதியில் அமுதவாணனை நோக்கி அசீம் கூறுகையில், "குற்றம் உள்ள நெஞ்சு குறுகுறுக்கும். ஜனனி இந்த வீட்டில் இருந்து வெளியேற நீங்களே முழு காரணம். நீங்கள் அந்த பெண்ணை பயன்படுத்திக்கொண்டீர்கள். அவரை வெளியே அனுப்பிவிட்டீர்கள்" என்று கூறுகிறார்.