ஈஸ்வர் பிரச்சனை தொடர்ந்து பகல் நிலவு சீரியல் நடிகர் வீட்டில் வெடித்த புதிய பிரச்சனை!

ஈஸ்வர் பிரச்சனை தொடர்ந்து பகல் நிலவு சீரியல் நடிகர் வீட்டில் வெடித்த புதிய பிரச்சனை!



Azeem

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான தெய்வம் தந்த வீடு, பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம் போன்ற சீரியலில் நடித்து பிரபலமானவர் அஸும். இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு ஸோயா என்ற பெண்ணை பெண் பார்த்து திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் இரண்டு மூன்று ஆண்டுகள் நன்றாக சென்று கொண்டிருந்த நிலையில் தற்போது இருவருக்கு இடையே சண்டை ஏற்ப்பட்டு விவாகரத்து செய்ய இருப்பதாக அவருடன் நடித்த நடிகர் ஒருவர் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

Azeem

மேலும் இதை குறித்து டெக்னீஷியன் ஒருவர் இவ்வாறு கூறியுள்ளார். பகல் நிலவு சீரியலில் இவருக்கு ஜோடியாக நடித்த நடிகையுடன் பழக்கம் ஏற்ப்பட்டுள்ளது. அந்த பெண்ணு இப்ப தான் பள்ளிப்படிப்பை முடித்திருக்கு அதற்குள் இருவருக்கு இடையே பழக்கம் ஏற்ப்பட்டு விட்டது.

மேலும் இவர்களுக்கு சிறந்த புதுமுக ஜோடி என்றெல்லாம் அவார்ட் கொடுத்தவுடன் வீட்டில் பிரச்சனை பெரிதாக ஆரம்பமானது. அது ஷுட்டிங் ஸ்பார்ட் வரை வர வந்துவிட்டது. அதன் பிறகு தான் எங்களுக்கு இந்த உண்மைகள் அனைத்தும் தெரியவந்தது எனவும், தற்போது அஸும் தனது மனைவியை பல வழிகளில் டார்ச்சர் செய்வதாகவும் டெக்னீஷியன் ஒருவர் கூறினார்.

Azeem

பகல் நிலவு சீரியல் முடிவடைந்த நிலையில் அடுத்த சீரியலில் அவருடன் நடிப்பேன் என கூறி அதே நடிகையுடன் மீண்டும் நடித்துள்ளார். அந்த விஷயம் அஸுமின் மனைவியின் காதுக்கு போகவே சில நாட்களிலேயே அந்த நடிகையை சீரியலிருந்து பாதியிலேயே நீக்கியுள்ளனர். 

மேலும் இது குறித்து அஸும் மனைவி கூறுகையில் எங்களுக்குள் பிரச்சனை இருப்பது உண்மை தான் எனவும் தற்போது இருவரும் பிரிந்து தான் வாழ்வதாக கூறியுள்ளார். மேலும் இந்த விவகாரம் வெளியில் வரும் போது தெரிந்து கொள்வீர்கள் என்றும் 
ஸோயா கூறினார். ஆனால் இதை பற்றி அஸும் கூறுகையில் இவை அனைத்து பெய் என்று மட்டும் கூறியுள்ளார்.