அயலான் திரைப்பட வெளியீட்டுக்கு தடை.! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!

அயலான் திரைப்பட வெளியீட்டுக்கு தடை.! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!



Ayalanmoviechennaihighcourtjudgement

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள அயலான் திரைப்படத்தையும், வைபவ் நடிப்பில் உருவாகியுள்ள ஆலம்பனா திரைப்படத்தையும் வெளியிடுவதற்கு 4 வாரங்களுக்கு தடை விதித்திருக்கிறது. சென்னை உயர்நீதிமன்றம். இந்த 2 திரைப்படங்களையும் தயாரிக்கும் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் தங்களுக்கு கொடுக்க வேண்டிய 14.70 கோடி ரூபாய் நிலுவைத் தொகையை கொடுக்கவில்லை என்று தெரிவித்து டி.எஸ்.ஆர் ஃபிலிம்ஸ் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

sivakarthikeyan

அதனடிப்படையில், கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் தரப்பில் டி. எஸ். ஆர் ஃபிலிம்ஸ் நிறுவனத்திற்கு 3 கோடி ரூபாய் முதல் தவணை தொகையாக வழங்கப்பட்டது. ஆனாலும் அதன் பிறகு மீதியுள்ள தொகையை கொடுக்கவில்லை என்று டி.ஆர்.எஸ் நிறுவனம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அந்த வழக்கில் தங்களுக்கு செலுத்த வேண்டிய 14.70 கோடி ரூபாய் நிலுவைத் தொகையை வழங்காமல் கே.ஜே.ஆர் நிறுவனம் திரைப்படங்களை வெளியிட திட்டமிட்டிருக்கிறது என்றும் நிலுவைத் தொகையை வழங்குவரையில் ஆலம்பனா, அயலான் உள்ளிட்ட திரைப்படங்களை வெளியிட அனுமதி வழங்கக் கூடாது எனவும் டி.எஸ். ஆர் நிறுவனம் சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டது.

sivakarthikeyan

இந்த நிலையில், நேற்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சரவணன், டி.ஆர்.எஸ் நிறுவனத்தின் வாதத்தில் முகாந்திரமிருப்பதாக தெரிவித்து, அந்த 2 திரைப்படங்களையும் 4 வாருங்கள் வரையில் வெளியிடக் கூடாது என்று தீர்ப்பு வழங்கி, இந்த வழக்கின் விசாரணையை ஜனவரி மாதம் 9-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.