42 வயதில் இரட்டை குழந்தைகளை ஈன்றெடுத்த தமிழ் சீரியல் நடிகை; குவியும் வாழ்த்துக்கள்.!
அட... நடிகை அதுல்யா ரவியா இது... ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு இப்படி மாறிட்டாரே... வைரலாகும் புகைப்படம்!!
![Athulya Ravi latest photo viral](https://cdn.tamilspark.com/large/large_athulya-ravi-35468-1200x630.jpg)
தமிழில் காதல் கண்கட்டுதே என்றே திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அதுல்யா ரவி. முதல் படமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்து கதாநாயகன், ஏமாளி, நாகேஷ் திரையரங்கம், கீ, அடுத்த சாட்டை, கேப்மாரி போன்ற படங்களில் நடித்துள்ளார்.
கடைசியாக இவர் நாடோடிகள் 2 படத்தில் முக்கிய நாயகிகளில் ஒருவராக நடித்திருந்தார். ஆனால் நாடோடிகள் படம் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு ஓடவில்லை. தற்போது அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் அதுல்யா தற்போது வெளியிட்ட ஒன்றை புகைப்படம் ரசிகர்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. அந்த புகைப்படத்தில் ஆள் அடையாளமே தெரியாத அளவுக்கு வித்தியாசமாக உள்ளார்.