பிக்பாஸ் அபிநய், அர்ச்சனாவிற்கு இடையே இப்படியொரு உறவா! புகைப்படத்துடன் அவரே போட்டுடைத்த சீக்ரெட்!

பிக்பாஸ் அபிநய், அர்ச்சனாவிற்கு இடையே இப்படியொரு உறவா! புகைப்படத்துடன் அவரே போட்டுடைத்த சீக்ரெட்!



archana-tweet-about-friendship-with-abinay

சின்னத்திரையில் தற்போது முன்னணி தொகுப்பாளினிகளுள் ஒருவராக வலம் வருபவர் அர்ச்சனா. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஆஸ்தான தொகுப்பாளினியாக இருந்து ஏராளமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய அவர் பின் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பெருமளவில் பிரபலமானார்.

அதனை தொடர்ந்து அர்ச்சனா தற்போது விஜய் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அர்ச்சனா, பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்களிடையே பெருமளவில் பிரபலமானவரும், நடிகர் ஜெமினி கணேசனின் பேரனுமான அபிநய்யுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.

மேலும் அதில் அவர் தங்களுக்கு இடையேயுள்ள உறவு குறித்தும் தெரிவித்துள்ளார். அதாவது அந்த பதிவில் அர்ச்சனா, 
எங்கள் இருவரின் அம்மாக்களும் ஒன்றாக ஒரே பள்ளியில் படித்தவர்கள். அதனால் நாங்கள் இருவரும் நீண்ட காலமாக நண்பர்களாக உள்ளோம் என கூறியுள்ளார். அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.