கடல் கன்னியாக அசத்தும் ஆண்ட்ரியா.. உச்சு கொட்டும் ரசிகர்கள்.!

கடல் கன்னியாக அசத்தும் ஆண்ட்ரியா.. உச்சு கொட்டும் ரசிகர்கள்.!



Andrea Jeremiah May Acts as Mermaid Character

தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி நடிகையாகவும், பாடகியாகவும் இருப்பவர் ஆண்ட்ரியா. இவர் வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடிக்கும் விருப்பம் கொண்டவர். சமீபத்தில் வெளியாகிய அல்லு அர்ஜுனின் "புஷ்பா" திரைப்படத்தில், "ஊ சொல்றியா மாமா" என்ற பாடலை பாடியிருந்தார். 

இந்த நிலையில், தற்போது ஆண்ட்ரியா பேண்டஸி திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாகவும், துப்பாக்கி முனை திரைப்படத்தின் இயக்குனர் தினேஷ் செல்வராஜ் இயக்கி வரும் படத்தில், ஆண்ட்ரியா கடல் கன்னியாக நடித்து வருவதாகவும் தெரியவருகிறது. கடந்த சில மாதத்திற்கு முன்னர் ஆண்ட்ரியா கடல் கன்னி போல போட்டோ சூட் நடத்தி புகைப்படம் வெளியிட்டு இருந்தார். 

Andrea Jeremiah

போட்டோசூட் அவருக்கு நடிக்க வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்ததை தொடர்ந்து, படக்குழுவும் - ஆண்ட்ரியாவும் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர், படத்தில் நடிக்க அவர் ஒப்பந்தம் செய்துள்ளார். மேலும், ஆண்ட்ரியா கடல் கன்னியை போன்ற வசீகர தோற்றத்துடன் இருப்பதால், அவர் கதாபாத்திரத்துடன் ஒன்றிப்போக நடிப்பார் என்றும் படக்குழு தெரிவித்துள்ளது. இது, இந்தியாவில் முதல் முறையாக எடுக்கப்படும் கடல் கன்னி திரைப்படம் இதுதான் என்றும் கூறப்படுகிறது. 

பெயர்வைக்காத இந்த படத்தில் சுனைனா, முனீஷ் காந்த் உட்பட பலரும் நடித்து வருகிறார்கள். இந்த படத்தின் படப்பிடிப்புக்காக தி.நகரில் ரூ.50 இலட்சம் மதிப்பில் செட்டும் அமைக்கப்பட்டுள்ளது.