வளைகாப்பு விழாவில் ஆலியாவிற்கு கிடைத்த மாபெரும் பரிசு! உச்சகட்ட இன்ப அதிர்ச்சியில் காதல் ஜோடி!

வளைகாப்பு விழாவில் ஆலியாவிற்கு கிடைத்த மாபெரும் பரிசு! உச்சகட்ட இன்ப அதிர்ச்சியில் காதல் ஜோடி!


alya-manasa-wish-on-her-baby-shower-function

பிரபல தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி என்ற சீரியல் மூலம் பிரபலமானவர்கள் ஆல்யா மானசா-சஞ்சீவ். கார்த்திக், செண்பா என்ற கதாபாத்திரத்தில் கணவன் மனைவியாக நடித்த இவர்கள் ஏராளமான ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தனர். மேலும் சீரியலில் மட்டுமின்றி நிஜத்திலும் காதலிக்க ஆரம்பித்தனர்.

அதனை தொடர்ந்து இருவரின் திருமணம் எப்பொழுது என திருமணம் ரசிகர்கள் எதிர்பார்த்துவந்த நிலையில் அவர்கள் இருவரும் எவருக்கும் சொல்லாமல், ரகசியமாக திருமணம் செய்து கொண்டனர். மேலும் ஆலியா மானஸாவின் குடும்பத்தினரின் விருமாப்புமின்றி திருமணம் நடைபெற்றதாக கூறப்பட்டது. பின்னர் திரைபிரபலங்கள் பலரும் கலந்துகொள்ள வரவேற்பு விழா கோலாகலமாக நடைபெற்றது.

aly manasa

 அதனை தொடர்ந்து சமீபத்தில் விழா ஒன்றில் ஆலியா மானசா கர்ப்பமாக இருப்பதாக சஞ்சய் மகிழ்ச்சியுடன் தெரிவித்திருந்தார். ஆனால் ஆலியா மானசாவின் அம்மா பேசுவதில்லை என அவர் வருத்தப்படுவதாகவும் அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில் சமீபத்தில் கோலாகலமாக வளைகாப்பு விழா நடைப்பெற்றுள்ளது. இந்த வளைகாப்பு விழாவில் ஆலியாவின் தாயார் கலந்து கொண்டு அவரை வாழ்த்தி ஆசீர்வாதம் செய்துள்ளார். இதனை சற்றும் எதிர்பாராத சஞ்சீவ்- ஆலியா மானசா ஜோடி கடும் மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளனர்.