பிரபாஸின் தொடர் தோல்விகளுக்கு பிறகு.! மிகப்பெரிய வெற்றியை கொடுத்து சலார் திரைப்படம்.!

பிரபாஸின் தொடர் தோல்விகளுக்கு பிறகு.! மிகப்பெரிய வெற்றியை கொடுத்து சலார் திரைப்படம்.!



afterprabhasseriesoffailuressalaarwasahuge

சலார் திரைப்படத்தின் முதல் பாகத்தில் பிரித்விராஜ், பிரபாஸ், சுகுமாரன், ஸ்ருதிஹாசன்  ஆகியோர் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை திரைக்கு வந்தது.

இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதோடு, இந்த திரைப்படத்தில் நடித்த அனைத்து நடிகர், நடிகைகளும் வெகுவாக பாராட்டப்பட்டனர். அத்துடன் மட்டுமல்லாமல், இந்த திரைப்படத்தின் இயக்குனருக்கும் பாராட்டு குவிந்து வருகிறது.. ஹைதராபாத் ரசிகர்கள் ஆர்.டி.சி.எக்ஸ் சாலையில் வீதிகளில் இறங்கி மிகப்பெரிய கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

salaar

இந்த சலார் திரைப்படத்தை காண்பதற்கு 30.5 லட்சம் டிக்கெட்டுகள் முன்கூட்டியே விற்பனை செய்யப்பட்டிருக்கலாம் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலமாக இந்தியாவில் பிரீ புக்கிங் மூலமாக ரூபாய் 95 கோடி வசூலாகியிருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அதனடிப்படையில், இந்த திரைப்படம் வெளியிடப்பட்ட 2-ம் நாள் இந்த திரைப்படம் ரூபாய் 12.77 கோடி அட்வான்ஸ் புக்கிங் செய்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. உலகம் முழுவதும் இந்த திரைப்படம் முதல் நாளில் 175 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. வெள்ளிக்கிழமை அதிகாலை 12.21 மணியளவில் ஆரம்பமான நிகழ்வுகள் வார இறுதி முழுவதும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடைசி புள்ளி விவரங்கள் இன்னும் வரவில்லையாம்.

salaar

பாகுபலி திரைப்படத்திற்கு பிறகு, முதல் முறையாக இந்த திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய இடத்தை தக்கவைத்துக் கொள்ளும் என்று சொல்லப்படுகிறது. இந்த திரைப்படம் பிரபாஸின் இதற்கு முந்தைய திரைப்படங்களான சாஹோ, ஆதி புருஷ், ராதே ஷியாம் ஆகிய திரைப்படங்களின் பார்வையாளர்களை மகிழ்விக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. ஆனாலும் இந்த திரைப்படத்தின் சண்டைக் காட்சிகள் மற்றும் திரைப்படத்தின் ஒட்டுமொத்த அதிர்வு அதன் usbகளாக இருந்ததன் காரணமாக, அவருக்கு ஏற்றதாக இருந்தது.

கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான கன்னட திரைப்படமான உக்ரம் திரைப்படத்தை அடிப்படையாக இந்த சலார் திரைப்படம் கொண்டது என்றாலும் கூட, இந்த திரைப்படத்தின் இயக்குனர் ஒப்புக்கொண்டதைப் போல கே ஜி எஃப் திரைப்படத்தை போன்று கதை விரிவடையும் விதத்தில் தனித்துவமாக இந்த திரைப்படத்தில் பிரித்விராஜ் வரதராஜ் மன்னராகவும் பிரபாஸ் தேவாவாகவும் நடித்துள்ளனர்.