நாக சைதன்யாவுடன் காதலா?.. ஆவேசத்தில் கடுகடுவென பதில் அளித்த நடிகை சோபிதா.!

நாக சைதன்யாவுடன் காதலா?.. ஆவேசத்தில் கடுகடுவென பதில் அளித்த நடிகை சோபிதா.!



Actress Sobhita about Naga Chaitanya Love Issue 


தமிழ் திரையரங்கில் முன்னணி நடிகையாக இருந்து வந்த நடிகை சமந்தா. தமிழில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தெலுங்கு மொழியில் வெளியான பல படங்களிலும் நடித்திருந்தார்..

அங்கு நாக சைதன்யாவுடன் ஏற்பட்ட நட்பு காதலாக மாறி இருவரும் திருமணம் செய்துகொண்ட நிலையில், இருவரும் திருமணம் செய்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். 

ஒருகட்டத்தில் இருவரும் ஒரே ஆண்டுக்குள் தங்களின் விவகாரத்தையும் அறிவித்து அதிர்ச்சி கொடுத்தனர். விவாகரத்துக்கு பின்னர் சமத்தா மகிழ்ச்சியாக ஊர் சுற்றி வருகிறார். 

இதனிடையே, சைதன்யா விவாகரத்துக்கு பின்னர் நடிகை சோபிதாவை காதலித்து வருவதாக வதந்திகள் கிளம்பி இருக்கிறது. இந்த விஷயம் தொடர்பாக நடிகை சோபிதா விளக்கம் அளிக்கையில்,

"உண்மை தெரியாமல் பேசுபவர்களுக்கு நான் பதில் சொல்ல வேண்டும் என்ற அவசியம் எனக்கு இல்லை. எந்த தவறும் நான் செய்யவில்லை. அதைப்பற்றி நான் விளக்கம் கொடுக்க போவதுமில்லை" என ஆவேசத்துடன் கூறினார்.