செக்ஸ் மாத்திரை; 24 மணிநேரமும் அந்த மாதிரி டார்ச்சர்.! பகீர் கிளப்பிய நடிகை சம்யுக்தாவின் தந்தை!!

செக்ஸ் மாத்திரை; 24 மணிநேரமும் அந்த மாதிரி டார்ச்சர்.! பகீர் கிளப்பிய நடிகை சம்யுக்தாவின் தந்தை!!



actress-samyuktha-talk-about-vishnukanth

விஜய் டிவியில் சிப்பிக்குள் முத்து என்ற சீரியலில் நடித்த நடிகர் விஷ்ணுகாந்த் மற்றும் சம்யுக்தா இருவரும் காதலித்து கடந்த மார்ச் மாதம் திருமணம் செய்துகொண்டனர். ஆனால் திருமணமான ஒரு மாதத்திலேயே கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். மேலும் இருவரும் தொடர்ந்து ஒருவரை ஒருவர் குறை கூறிக்கொண்டு குற்றச்சாட்டுகளை வைத்து யூடியூப் சேனல்களுக்கு பேட்டியளித்து வருகின்றனர்.

இந்நிலையில், சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு தனது பெற்றோருடன் பேட்டியளித்த நடிகை சம்யுக்தா பல அதிர்ச்சி தகவல்களை பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது, விஷ்ணுகாந்த் என்னையும், என் பெற்றோரையும் எப்போதுமே மரியாதையாக நடத்தியது கிடையாது. அவர் என்னை கல்யாணம் செய்தது செக்ஸுக்காக மட்டும்தான். அவருக்கு 24 மணி நேரமும் அதே நினைப்புதான்.

Vishnukanth

நானும் ஒரு பெண், எனக்கும் உணர்வுகள் இருக்கும் என அவர் நினைத்தது கிடையாது.அந்த விஷயத்தில் நான் விஷ்ணுகாந்துக்கு மிஷினாகவே தெரிந்திருக்கிறேன். ஆபாச வீடியோவை பார்த்து இந்த மாதிரி செய்ய வேண்டும் என கட்டாயபடுத்துவார். அதற்கு நான் ஒத்துழைக்கவில்லை என்றால் என்னை வேறுமாதிரி ட்ரீட் செய்வார். வலி தாங்க முடியாமல் கத்தினால் வாயை மூட சொல்லி அடிப்பார் என்று கண்கலங்கியவாறு கூறியுள்ளார்.

இந்நிலையில் தற்போது சம்யுக்தாவின் தந்தை, விஷ்ணுகாந்த் செக்ஸ் மாத்திரைகளை உட்கொண்டு எனது மகளை 24 மணி நேரமும் பாலியல் டார்ச்சர் செய்தார் என கூறி பகீர் கிளப்பியுள்ளார். இது தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.