ப்ப்பா.. ஒரு வருஷமாச்சு.! எவ்வளவு போராட்டங்கள், பிரார்த்தனைகள்.! உருக்கமாக நடிகை சமந்தா வெளியிட்ட போஸ்ட்!

ப்ப்பா.. ஒரு வருஷமாச்சு.! எவ்வளவு போராட்டங்கள், பிரார்த்தனைகள்.! உருக்கமாக நடிகை சமந்தா வெளியிட்ட போஸ்ட்!



actress-samantha-post-about-her-disease

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து டாப் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை சமந்தா. இவர் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். அதனை தொடர்ந்து சமந்தா சினிமாவில் பெருமளவில் கவனம் செலுத்தி பல படங்களில் நடித்து வந்தார்.

இந்த நிலையில் நடிகை சமந்தா கடந்த ஆண்டு அவர் மயோசிடிஸ் (Myositis) எனும் தசை அலர்ஜி நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார். மேலும் அதற்காக அவர் தீவிர சிகிச்சையும் எடுத்து வந்தார். மேலும் சிகிச்சைக்கு பின் உடல்நலம் தேறிய அவர் மீண்டும் படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையில் அவர் கோவில்களுக்கு சென்று தரிசனமும் மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில் அவர் நோயால் தான் பாதிக்கப்பட்டது குறித்து உருக்கமாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். நோய் பாதிப்பு கண்டறியப்பட்டு 1 வருடம் ஆகிறது. இந்த 1 வருடம் எனது உடலுடன் பல போராட்டங்கள். சர்க்கரை, உப்பு மற்றும் பருப்பு வகைகள் கூட உட்கொள்ள முடியாத நிலைமை. மாத்திரைகள் மட்டுமே எனக்கு உணவாக இருந்து என்னை பாடாய் படுத்தியது.

தொழில்வழியிலும் பல தோல்விகள் என்னை பாதித்தது.  இந்த ஒரு வருடம் பல பிரார்த்தனைகள் பூஜைகள். ஆசிர்வாதத்திற்கும் பரிசுக்காகவும் அல்ல. வலிமையையும் அமைதியையும் பெற. சில சமயங்களில் பெரிய வெற்றி என்பது வாழ்க்கையில் முன்னேறிச் செல்வதே. எல்லா நேரமும் நாம் நினைத்தது போல் நடக்காது என்பதை எனக்குக் கற்றுக் கொடுத்த ஆண்டு. நாம் கட்டுப்படுத்தக் கூடியவற்றைக் கட்டுப்படுத்த வேண்டும். மீதமுள்ளவற்றை விட்டுவிட வேண்டும் என பதிவிட்டுள்ளார்.