நடுரோட்டில் கணவர் கண்முன்னே சுட்டுக் கொல்லப்பட்ட பிரபல நடிகை.! நடந்தது என்ன? அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

நடுரோட்டில் கணவர் கண்முன்னே சுட்டுக் கொல்லப்பட்ட பிரபல நடிகை.! நடந்தது என்ன? அதிர்ச்சியில் ரசிகர்கள்!!



Actress ria kumari shoot and kill by robbery

ஜாா்க்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்தவர் நடிகை ரியா குமாரி. இவர் பல படங்களில் நடித்து பிரபலமானவர். இவரது கணவர்  திரைப்படத் தயாரிப்பாளரான பிரகாஷ் குமாா். இவர்களுக்கு 2 வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் அவர்கள் ராஞ்சியிலிருந்து மேற்கு வங்காளத்திற்கு காரில் சென்றுள்ளனர்.

அப்பொழுது மகிஷ்ரேகா என்ற இடத்தில் அவர்கள் சென்று கொண்டிருந்த போது காரை மறித்த மூன்று பேர் கொண்ட கும்பல் வழிப்பறியில் ஈடுபட்டு பிரகாஷ் குமாரை தாக்கியுள்ளது. இந்த நிலையில் நடிகை ரியா குமாரி தனது கணவரை காப்பாற்ற முயன்றுள்ளார். அப்பொழுது அந்த மர்ம நபர்கள் ரியா குமாரியை துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

dead

இந்நிலையில் உள்ளூர் மக்கள் உதவியுடன் பிரகாஷ் குமார் ரத்த வெள்ளத்தில் சரிந்து கிடந்த ரியா குமாரியை, உலுபெரியா மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.  இந்த நிலையில் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் பிரகாஷ் குமார் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டனர்.

இதற்கிடையில் ரியா குமாரியின் கணவர் மீது சந்தேகம் இருப்பதாக  ரியா குமாரியின் உறவினர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர். அதனடிப்படையில் போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியதில் அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளதாகவும், சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்துவதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.