பிரபல நடிகரை பதம் பார்க்கனும்னு ஆசையாக இருக்கிறது என்று ஓப்பனாக பேசிய ரேஷ்மா.! சர்ச்சைக்குரிய பேட்டியால் பரபரப்பு..

பிரபல நடிகரை பதம் பார்க்கனும்னு ஆசையாக இருக்கிறது என்று ஓப்பனாக பேசிய ரேஷ்மா.! சர்ச்சைக்குரிய பேட்டியால் பரபரப்பு..



Actress reshma controversy interview

வெள்ளித்திரையில் இருந்து வாய்ப்பு கிடைக்காமல் சின்னத்திரைக்கு நடிகர்கள், நடிகைகள் வருவதும் சின்னத்திரையில் இருந்து முன்னேறி வெள்ளித்திரையில் நடிப்பதும் சினிமா துறையில் சகஜமாகும். இதன்படி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாக்கியலட்சுமி' தொடரில் நடித்து வரும் நடிகை தான் ரேஷ்மா. 'வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்' திரைப்படம் 2016 ஆம் வருடம் வெளியானது. படத்தில் நடிகர் சூரிக்கு மனைவி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

ரேஷ்மா

முதல் படத்திலேயே மிகவும் பிரபலமான ரேஷ்மா அதன் பிறகு 'விலங்கு' என்னும் வெப் சீரியஸில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தினார். இவரின் நடிப்பு திறமை அனைவராலும் பாராட்டப்பட்டாலும் சீரியஸுக்கு பிறகு இவருக்கு சினிமா வாய்ப்புகள் குறைந்துவிட்டது.

இதன்பின் சின்னத்திரைக்கு வந்த ரேஷ்மா, பாக்கியலட்சுமி சீரியல் மூலம் பல ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்துள்ளார். மேலும் சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ரேஷ்மா கவர்ச்சியான புகைப்படங்களையும், தன் ஆண் நண்பருடன் இருக்கும் புகைப்படங்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

ரேஷ்மா

சமீபத்தில் ரேஷ்மா பிரபலமான யூ டியுப் சேனலுக்கு பேட்டி அளித்தார். அந்த பேட்டியில் ரசிகர் ஒருவர் ரேஷ்மாவின் புகைப்படத்திற்கு உங்களை படம் பார்க்க வேண்டும் என்று கமெண்ட் செய்துள்ளார். அதற்கு உங்களின் பதில் என்ன என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் சொன்ன ரேஷ்மா "எனக்கும் தான் ரன்பீர் கபூரை படம் பார்க்க வேண்டும் அவரது மனைவி ஆல்யா பட் அடிக்க வர மாட்டாரா, ஆசைபட தான் முடியும் என்று கூறிய வீடியோ காட்சி சமூக வலைதளத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது.