அப்பாவின் தோளுக்கு பின், அழகரை நேரில் நெருங்கிப்பார்த்த நடிகர் சூரி; மனம்நெகிழ்ந்து பதிவு.!
கணவர், மகனுடன் செம கொண்டாட்டத்தில் நடிகை பூமிகா! 43 வயசுலயும் பயங்கர மாடர்னாக எப்படி இருக்காரு பார்த்தீர்களா!!
கணவர், மகனுடன் செம கொண்டாட்டத்தில் நடிகை பூமிகா! 43 வயசுலயும் பயங்கர மாடர்னாக எப்படி இருக்காரு பார்த்தீர்களா!!
தமிழ் சினிமாவில் விஜய் நடிப்பில் வெளிவந்த பத்ரி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை பூமிகா. அதைத்தொடர்ந்து அவர் ரோஜா கூட்டம் படத்தின் மூலம் பெருமளவில் பிரபலமானார். பின்னர் ஜில்லுனு ஒரு காதல் திரைப்படத்தில் அவரது நடிப்பு அனைவரையும் கவர்ந்தது. பூமிகா தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களிலேயே நடித்திருந்தாலும் அவர் தெலுங்கில் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.
மேலும் அவர் ஹிந்தி, மலையாளம், மற்றும் பஞ்சாப் மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். நடிகை பூமிகா கடந்த 2007 ஆம் ஆண்டு பரத் தாகூர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். அவர் தற்போது தொடர்ந்து பல படங்களில் அண்ணி மற்றும் அக்கா என்ற துணை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று பூமிகா தனது 43வது பிறந்தநாளை தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் கொண்டாடியுள்ளார். அந்த புகைப்படத்தை அவர் இணையத்தில் வெளியிட்ட நிலையில் அது வைரலாகி வருகிறது. மேலும் பலரும் அவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.