சாப்பாடு இல்லையென்றாலும் பரவாயில்லை! ஆனால் அதை மட்டும் செய்ய மாட்டேன்! - மும்தாஜ் அதிரடி!

சாப்பாடு இல்லையென்றாலும் பரவாயில்லை! ஆனால் அதை மட்டும் செய்ய மாட்டேன்! - மும்தாஜ் அதிரடி!



actress-muntaz-angry-speech-at-todays-promo

பிரபல தமிழ் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மாபெரும் வெற்றி பெற்ற தொடர் பிக் பாஸ். சீசன் ஓன்று மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து இதன் அடுத்த சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது.

தான் உண்டு தன வேலை உண்டு என்று அணைத்து போட்டியாளர்களும் இருந்தனர். பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி துவங்கிய போது யார் மீதும் கோவம் கொள்ளாமல் இருந்த இவர்கள் தற்போது ஒருவரை ஒருவர் தாக்கி பேசியும், தங்களுடைய கோவத்தை வெளிப்படையாகவும் காட்ட துவங்கியுள்ளனர்.

Mumtaj fight
இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில், போட்டியாளர் ஒருவர் மும்தாஜ் போல் பொன்னம்பலத்திடம் பேசிக்காட்டுகிறார். அதில் "பாவம் நீங்க காலையிலேயே இரண்டு தோசை தான் சாப்டீங்க, நான் ஒரு தோசை கொடுத்தேன் என கூறுகிறார்". இதற்கு பொன்னம்பலம் இதையும் சொல்லி காட்டுகிறாரா என கேட்கிறார்.

இதைதொடர்ந்து யஷிகாவிடம் மும்தாஜ் பேசும் காட்சி காட்டப்படுகிறது. அதில் மும்தாஜ், இந்த வீட்டில் யார் மீது பாசம் வைப்பது என தீர்மானிக்கவே முடியவில்லை என கூறி புலம்புகிறார். மேலும் தன்னுடைய கையில் சாப்பாடு இருக்கிறது என சாப்பிட்டு கொண்டிருக்கும் தோசையை காட்டி, சாப்பிட சாப்பாடு கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை பொய் சொல்ல மாட்டேன் என ஆவேசமாக கூறுகிறார்.