இனிமேல் என் பொண்ணு இப்படியெல்லாம் நடிக்கமாட்டா.! கதறி அழுத நடிகை மீனாவின் அம்மா.! எதனால் தெரியுமா??

இனிமேல் என் பொண்ணு இப்படியெல்லாம் நடிக்கமாட்டா.! கதறி அழுத நடிகை மீனாவின் அம்மா.! எதனால் தெரியுமா??



actress-meena-mother-cried-in-rasavin-manasile-movie-sh

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை மீனா. தொடர்ந்து ஹீரோயினாக அவதாரமெடுத்த அவர் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், சத்யராஜ், சரத்குமார், அஜித், பிரபு, கார்த்திக் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து டாப் ஹீரோயினாக வலம் வந்தார். இவருக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே இருந்தது.

நடிகர் ராஜ்கிரண் ஹீரோவாக முதன்முதலாக அறிமுகமான திரைப்படம் என் ராசாவின் மனசிலே. இந்த படத்தை தனுஷின் தந்தையான இயக்குனர் கஸ்தூரிராஜா இயக்கியிருந்தார். இதில் ராஜ்கிரண் மனைவியாக நடிகை மீனா நடித்திருந்தார். இப்படத்தில் கர்ப்பமாக இருக்கும் மீனா இறந்துவிடுவார். பின்னர் மீனாவிற்கு இறுதி சடங்குகள் செய்யும் காட்சிகள் மிகவும் யதார்த்தமாக தத்ரூபமாக எடுத்துள்ளனர்.

Rajkiran

அதனைக் கண்ட படப்பிடிப்பில் இருந்த நடிகை மீனாவின் அம்மா கதறி அழுதுள்ளாராம். 'என்ன என் பொண்ண வச்சு இப்படி எல்லாம் எடுக்குறீங்க. இதற்கெல்லாம் நான் ஒத்துக்கொள்ள மாட்டேன்' என படக்குழுவினருடன் தகராறு செய்துள்ளார். பின்னர் அவரை வேறு இடத்தில் தங்க வைத்துவிட்டு அவருக்கு தெரியாமல் அந்த காட்சிகளை எடுத்துள்ளனர். தொடர்ந்து நடிகை மீனாவின் அம்மா இனிமேல் படங்களில் என் பொண்ணு இந்த மாதிரி காட்சிகளில் நடிக்க மாட்டார் என கறாராக தெரிவித்து விட்டாராம்.