ஓவர் குசும்புதான்.! செல்பி எடுக்க வந்த நபர் செய்த காரியத்தால் செம ஷாக்கான பரமசுந்தரி நாயகி!! வைரல் வீடியோ!!

ஓவர் குசும்புதான்.! செல்பி எடுக்க வந்த நபர் செய்த காரியத்தால் செம ஷாக்கான பரமசுந்தரி நாயகி!! வைரல் வீடியோ!!



Actress keerthi sanon shocked by the person who take selfi with her

திரைத்துறையில் பிரபலமாக இருக்கும் நடிகர், நடிகைகள் பொது இடங்களுக்கு வந்தால் அவர்களை பார்க்கவே பெரும் கூட்டம் கூடும். மேலும் அவர்களுடன் ஒரு செல்பியாவது எடுக்க வேண்டுமென பெருமளவில் முயற்சிப்பர். இந்த நிலையில் பிரபல பாலிவுட் நடிகை கீர்த்தி சனோன் உடன் செல்பி எடுக்க சென்ற குள்ளமான நபர் செய்த காரியம் நடிகையே ஷாக்காகி வாயடைக்க வைத்துள்ளது.

பாலிவுட் சினிமாவில் பல பிரபலங்களுடன் இணைந்து நடித்து முன்னணி  நடிகையாக திகழ்பவர் கீர்த்தி சனோன். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளிவந்த மிமி படம் பெருமளவில் வெற்றி அடைந்தது. அதிலும் அப்படத்தில் இடம்பெற்ற பரமசுந்தரி பாடல் உலகம் முழுவதும் செம ஹிட்டானது. இந்நிலையில் கீர்த்தி சனோன் அண்மையில் பொது இடத்திற்கு சென்றுள்ளார். அப்பொழுது அவரைப் பார்க்க கூட்டம் திரண்டது.

இந்நிலையில் அங்கு குள்ளமான நபர் ஒருவர் கூட்டத்திற்குள் புகுந்து நடிகையுடன் செல்ஃபி எடுக்க சென்றுள்ளார். அவரை அங்கிருந்தவர்கள் கிண்டல் செய்துள்ளனர். ஆனால் அவர்களை கடிந்த கீர்த்தி அந்த குள்ளமான நபரை அருகில் வரவழைத்து அவருடன் கீழே அமர்ந்து செல்பி எடுத்துள்ளார். உடனே அந்த நபர் தன்னிடமிருந்த கூலிங் கிளாஸ் போட்டுக்கொண்டு இன்னொரு செல்பி எடுக்க கூறியுள்ளார். இதனைக் கண்ட கீர்த்தி சனோன் ஷாக்காகிள்ளார். பின் அங்கே இருந்தவர்கள் அந்த நபரை அலேக்காக தூக்கிச் சென்றனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.