இது ஒவ்வொருவருக்கும் சொந்தம்.! உழைப்பாளர் தின ஸ்பெஷல்.! கவிஞர் வைரமுத்து அசத்தல் வாழ்த்து!!
40 படங்களுக்கு மேல் நடித்த பிரபல நடிகை..! பல வருடங்களாக பூட்டிய வீட்டிற்குள் வாழ்க்கை..! தீராத பயம்..! வெளியாகும் பகீர் தகவல்கள்..!
40 படங்களுக்கு மேல் நடித்த பிரபல நடிகை..! பல வருடங்களாக பூட்டிய வீட்டிற்குள் வாழ்க்கை..! தீராத பயம்..! வெளியாகும் பகீர் தகவல்கள்..!
1990-களில் தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்த கதாநாயகிகளில் ஒருவர்தான் நடிகை கனகா. இவர் நடித்து வெளியான கரகாட்டக்காரன் திரைப்படம் ஒரு வருடத்திற்கு மேலாக திரையரங்குகளில் ஓடியது. மிகவும் புகழ்பெற்ற கனகா பல வெற்றி படங்களை தந்துள்ளார். இவர் தமிழ் மலையாளம் தமிழ், தெலுங்கு, மலையாளம் என 3 மொழிகளிலும் ஏராளமான படங்களில் நடித்ததன் மூலம் பல சொத்துக்களை சேர்த்துள்ளார்.
மேலும் இவரது தாய் தேவிகாவும் ஒரு பிரபல நடிகை ஆவார். தேவிக்காவிற்கு ஓரே வாரிசான கனகாவின் பெயரில் தான் அணைத்து சொத்துக்களும் இருப்பதாக தெரிகிறது.
பல வருடங்கள் சினிமாவில் நடித்து வந்த அவர், ‘முத்துகுமார்’ என்ற பொறியாளரை திருமணம் செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. ஆனால் கனகவோ முத்துகுமார் என யாரையும் தெரியாது, இது வெறும் வதந்தி என மறுத்துள்ளார். இந்நிலையில் அவரது திருமண வாழ்க்கை ஒரு புதிராகவே இருந்து வருகிறது.
இந்நிலையில், கடந்த 2013 ஆம் ஆண்டு ஆலப்புழா மருத்துவமனையில் கனக மரணமடைந்துவிட்டதாக ஒரு தகவல் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் அந்த தகவல் போலியானது என்றும் தன்னிடம் உள்ள சொத்துக்களை அபகரிப்பதற்காக தனது தந்தையே இந்த தகவலை பரப்பினார் எனவும் இதுகுறித்து கனகா விளக்கம் கொடுத்திருந்தார்.
தான் யாரிடமும் பேசி பழகினால் தன்னுடைய சொத்துக்களை அபகரித்து விடுவார்கள் என்ற பயம் நடிகை கனகாவிற்கு இருந்து வருகிறது. இதனால் அவர் யாருடனும் பேசுவதில்லையாம். தனியாக பூட்டப்பட்ட வீட்டிற்குள்ளே வாழ்ந்து வருகிறார் என்று தெரியவந்துள்ளது
அவரது தந்தையே சொத்துக்காக தன்னை துன்புறுத்துகிறார் என கனகா குற்றச்சாட்டு சுமத்தியுள்ளார். எனவே அவர் கடந்த சில வருடங்களாக வீட்டை உள்பக்கமாக பூட்டிக்கொண்டு இருக்கும் இடமே தெரியாத நிலையில் தனிமையில் வசித்து வருவதாக கூறப்படுகிறது.
இது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.