கொரானாவில் இருந்து குணமடைந்த பிரபல நடிகை காலமானார்.! சோகத்தில் திரைத்துறையினர்.!

கொரானாவில் இருந்து குணமடைந்த பிரபல நடிகை காலமானார்.! சோகத்தில் திரைத்துறையினர்.!


actress-died

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருந்தாலும் நாளுக்கு நாள் நாம் சிலரை இழந்து கொண்டு தான் இருக்கிறோம். தற்போது வரை அரசியல் பிரபலங்கள் திரை பிரபலங்கள் என பலரும் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். 

இந்தநிலையில், பிரபல நடிகர் ரவிச்சந்திரனின் மருமகளும், நடிகர் ஹம்சவர்தனின் மனைவியுமான சாந்தி ஹம்சவர்தன் நேற்று காலமானார். சாந்தி ஹம்சவர்தன் ரேஷ்மா என்ற பெயரில் மு.களஞ்சியம் இயக்கிய ‘பூமணி’ படத்தில் இரண்டாவது நாயகியாகவும், நடிகர் கார்த்திக் உடன் ‘கிழக்கு முகம்’ என்ற படத்தில் நாயகியாகவும் நடித்தார். மேலும், சில படங்களில் நடித்துள்ளார். ஹம்சவர்தன் - சாந்தி தம்பதிக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் இருக்கின்றனர்.

இவருக்கு கடந்த மாதம் கொரோணா பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதனையடுத்து அவர் குணமடைந்து வீடு திரும்பினார். ஆனால் அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதால் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.