வசமா சிக்கிட்டாங்க.. நடிகை அமலாபாலுக்கு 2-வது திருமணம் நடந்தது உறுதி - ரகசியத்தை ஆதாரத்துடன் நிரூபித்த பவ்நிந்தர் சிங்..!!

வசமா சிக்கிட்டாங்க.. நடிகை அமலாபாலுக்கு 2-வது திருமணம் நடந்தது உறுதி - ரகசியத்தை ஆதாரத்துடன் நிரூபித்த பவ்நிந்தர் சிங்..!!


actress amalapaul 2nd marriage controversy

கோலிவுட்டில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை அமலாபால். இவருக்கு பவ்நிந்தர் சிங் என்பவருடன் நட்பு ஏற்பட்டு, இருவரும் திரைப்பட நிறுவனத்தை தொடங்கியுள்ளனர். இதற்காக விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கோட்டகுப்பம் அருகே வீடு ஒன்றை வாடகை எடுத்து இருவரும் தங்கி திரைப்பட தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டு வந்தனர். 

அப்போது பவ்நிந்தர் சிங்கும், அமலாபாலும் திருமணம் செய்து கொள்வதாக முடிவெடுத்த நிலையில், இருவரும் கருத்து வேறுபாட்டால் பிரிந்து விட்டனர். இந்த நிலையில், அமலாபால் சார்பாக அவரது மேலாளர் விழுப்புரம் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் ஒன்றை அளித்தார். 

அதில், "விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஆரோ அருகே தனக்கு சொந்தமான வீட்டில் தங்கியிருந்தபோது பவ்நிந்தர் சிங் தனக்கு பாலியல் தொல்லை அளித்ததாகவும், கருத்து வேறுபாட்டால் பிரிந்தாலும் பொருளாதார ரீதியாகவும், தொழில் ரீதியாகவும் துன்புறுத்தியதாகவும் குற்றம் சாட்டியிருந்தார். தன்னுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுவிடுவேன் என்றும் பவ்நிந்தர் சிங் மிரட்டுவதாகவும் அமலாபால் அளித்த புகாரில் குறிப்பிடப்பட்டிருந்தது. 

Actress amalapaul

இதனை தொடர்ந்து பவ்நிந்தர் சிங் மீதும், அவரது குடும்பத்தினர் மீதும் 16 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து அவரை காவல்துறையினர் கைது செய்தனர். அத்துடன் நீதிமன்றத்தில் பவ்நிந்தர் சிங் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார். அவரது மனு இன்று விசாரணைக்கு வந்தபோது, அமலாபாலுக்கும், தனக்கும் நடந்த பதிவு திருமண சான்றிதழை நீதிமன்றத்தில் அவர் சமர்ப்பித்துள்ளார். 

சான்றிதழில் 7.11.2018-ல் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள புஷ்கரின் ராதிகா பேலஸில் திருமணம் நடந்ததாக ஆதாரத்துடன் மனு அளித்தார். தற்போது அவருக்கு ஜாமின் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அமலாபாலுக்கும் பவ்நிந்தர் சிங்குக்கும் திருமணம் நடந்ததும் உறுதியானது.