வெள்ள நிவாரண பணிகளுக்காக ரூ.10 இலட்சம் வழங்கிய நடிகர் விஷ்ணு விஷால்.!

வெள்ள நிவாரண பணிகளுக்காக ரூ.10 இலட்சம் வழங்கிய நடிகர் விஷ்ணு விஷால்.!



actor-vishnu-vishal-gives-rs-10-lakh-to-tn-govt

 

கடந்த டிசம்பர் 3 மற்றும் 4ம் தேதிகளில் சென்னையை ஒட்டியுள்ள கடலில் மையம் கொண்டு கடந்த மிக்ஜாங் புயலின் காரணமாக, தலைநகரம் வெள்ளநீரில் தத்தளித்தது. 

ஏழை, செல்வந்தர் வித்தியாசமின்றி அனைவரும் இயற்கையின் கோரப்பிடியில் சிக்கி இருந்தனர். அரசு அனைவரையும் பாதுகாப்பாக மீட்டு முகாம்களில் தங்க வைத்தது. 

தொடர்ந்து, அரசு மக்களுக்கான நலத்திட்ட உதவிகளை மேற்கொண்டு வந்த நிலையில், நிவாரண பணிகளை மேற்கொள்ள மக்கள் அரசுக்கு நிதிஉதவி செய்ய வேண்டியும் முதல்வர் தனது கோரிக்கையை முன்வைத்தார். 

இதனையடுத்து, அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள், திரைத்துறையை சேர்ந்தவர்கள், சாமானியர்கள் என பலரும் தங்களால் இயன்ற நிதியுதவியை வழங்கி வருகின்றனர். 

இந்நிலையில், புயலின் போது வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட நடிகர் விஷ்ணு விஷாலும், அரசால் பத்திரமாக மீட்கப்பட்டார். இவருடன் ஹிந்தி நடிகர் அமீர் கானும் மீட்கப்பட்டு இருந்தார். தற்போது நடிகர் விஷ்ணு விஷால் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம், வெள்ள நிவாரண பணிகளுக்காக ரூ.10 இலட்சம் காசோலையை வழங்கினார்.