அய்யய்யோ.. நான் அவனில்லை., மார்பிங் செஞ்சுட்டாங்க..! நிர்வாண போட்டோஷூட்டுக்கு அந்தர்பல்டி விளக்கம் கொடுத்த ரன்வீர்..!!

அய்யய்யோ.. நான் அவனில்லை., மார்பிங் செஞ்சுட்டாங்க..! நிர்வாண போட்டோஷூட்டுக்கு அந்தர்பல்டி விளக்கம் கொடுத்த ரன்வீர்..!!



Actor Ranvir Nude Photo Issue Statement

பிரபல பாலிவுட் நடிகரான ரன்வீர் சிங் கடந்த சில மாதங்களுக்கு முன் ஒரு பத்திரிகைக்காக நிர்வாண புகைப்படம் எடுத்தார். ரன்வீரின் இப்புகைப்படங்கள் ஜூலை 21 அன்று ஆன்லைனில் வெளியிடப்பட்ட நிலையில், இப்புகைப்படங்கள் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 

அத்துடன் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் அதிகாரி ரன்வீரின் நிர்வாண புகைப்படங்கள் பெண்களின் உணர்வுகளை புண்படுத்தியதாக கூறி, செம்பூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகார் கடந்த ஜூலை 26 ஆம் தேதி அளிக்கப்பட்ட நிலையில், ரன்வீரின் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது.

 

தற்போது இது குறித்து பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங், "தான் ஆடையுடன் போட்டோ எடுத்ததாகவும், அதனை யாரோ மார்பிங் செய்து வெளியிட்டுள்ளதாக கூறியுள்ளார்" என்று செம்பூர் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.