"மூச்சு விட கூட பயமாக உள்ளது" நடிகர் ரஜினிகாந்தின் பகீர் பேச்சு.? அதிர்ச்சியில் ரசிகர்கள்.!?

"மூச்சு விட கூட பயமாக உள்ளது" நடிகர் ரஜினிகாந்தின் பகீர் பேச்சு.? அதிர்ச்சியில் ரசிகர்கள்.!?



Actor rajini kandh openup about political point

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருந்து வருபவர் ரஜினிகாந்த். இவர் தமிழில் 80களின் ஆரம்பங்களில் இருந்து தற்போது வரை தொடர்ந்து நடித்து வருகிறார். தனது நடிப்பு திறமையினாலும், அழகினாலும் ரசிகர்களை கவர்ந்த ரஜினிகாந்தை சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்கள் அன்போடு அழைத்து வருகின்றனர்.

rajini

மேலும் சமீபத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படம் வெளியானது. இப்படம் திரையரங்கில் வெளியாகி மிகப்பெரும் வெற்றி அடைந்து ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வந்தது. மேலும் ஜெயிலர் திரைப்படம் ரஜினிகாந்த் மற்றும் நெல்சனிற்கு திரை துறையில் திருப்பு முனையை தந்த படமாக உள்ளது.

இதனையடுத்து ரஜினிகாந்த் தலைவர் 170 என்ற படத்தில் நடித்து வருகிறார்.  இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இது போன்ற நிலையில், அவ்வப்போது அரசியல் கருத்துகளையும் தெரிவித்து வந்த ரஜினிகாந்த்தை நெட்டிசன்கள் இணையத்தில் கலாய்த்து வந்தனர். இதனால் அரசியல் கேள்விகளை கேட்காதீர்கள் என்று சமீபத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறினார்.

rajini

இது போன்ற நிலையில் சென்னை காவேரி மருத்துவமனையின் புது கிளை திறக்கப்பட்டது. இதில் கலந்து கொண்ட ரஜினிகாந்த் பத்திரிக்கையாளர் சந்திப்பில், "அரசியல் குறித்து பேச வேணாம் என நினைக்கிறேன். இது தேர்தல் நேரம். மூச்சு விட கூட பயமாக உள்ளது. என்று மனம் திறந்து பேசி இருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து வருகின்றனர்.