படத்தில் வருவது போலவே நிஜத்திலும் வாரி வழங்கும் நடிகர் பிரபாஸ்! குவியும் வாழ்த்துக்கள்!

படத்தில் வருவது போலவே நிஜத்திலும் வாரி வழங்கும் நடிகர் பிரபாஸ்! குவியும் வாழ்த்துக்கள்!



Actor praphas donated one crore for kerala people

கேரளாவில் கடந்த இரண்டு மாதங்களாக தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் கேரளா மக்கள் படும் துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். பலரதும் தங்களது உடமைகளை இழந்து உன்ன உணவில்லாமல், உறங்க இடம் இல்லாமல் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில்  கனமழையால் அம்மாநிலத்தில் உள்ள அனைத்து அணைகளும் நிரம்பி முழு கொள்ளளவை எட்டியதால் பல அணைகளின் மதகுகள் திறந்துவிடப்பட்டுள்ளன.  இதனால், கேரள மாநிலம் முழுவதும் வெள்ளக்காடானது.   

Bahubali

இந்த நிலையில்,  பிரபலங்கள் பலரும் முதல்வர் நிவாரண நிதிக்கு உதவித்தொகை அனுப்பி வருகின்றனர். தமிழக முதல்வர் மற்றும் பல அரசியல்வாதிகள், நடிகர்கள் சூர்யா, கார்த்தி ரூ. 25 லட்சமும், நடிகர் கமல்ஹாசன் ரூ. 25 லட்சமும், நடிகர்கள் சங்கம் ரூ. 5 லட்சமும், நடிகர் விஷால் ரூ. 10 லட்சமும், சிவகார்த்திகேயன் ரூ. 10 லட்சமும், நடிகை ரோகிணி ரூ. 2 லட்சமும், தனுஷ் ரூ. 15லட்சமும், நடிகை ஸ்ரீ ப்ரியா ரூ. 10 லட்சமும், நடிகர் சித்தார்த் ரூ. 10 லட்சமும், நடிகர் அல்லு அர்ஜூன் ரூ. 25 லட்சம் வழங்கியுள்ளனர்.

இதுவரை நடிகர்கள் எவரும் வழங்காத தொகையை நடிகர் பிரபாஸ் வழங்குயுள்ளார். வெள்ளநிவாரண நிதிக்கு ரூ. 1 கோடி ரூபாய் வழங்கியுள்ளனர். பலரும் இவரது இந்த செயலை பாராட்டி வருகின்றனர்.