பாலியல் புகாரில் சிக்கி விடுதலையானவர்களுக்கு மலர்மாலை - கொந்தளித்த நடிகர் பிரகாஸ்ராஜ், சித்தார்த்.!

பாலியல் புகாரில் சிக்கி விடுதலையானவர்களுக்கு மலர்மாலை - கொந்தளித்த நடிகர் பிரகாஸ்ராஜ், சித்தார்த்.!



Actor Prakash Raj and Siddardh Tweet about Issue

கோலிவுட்டின் பிரபலமான வில்லன் நடிகராக கொடிகட்டி பறந்தவர் பிரகாஷ்ராஜ். இவர் திரைப்பட நடிகர் மட்டுமின்றி இயக்குனர், தொகுப்பாளர், தயாரிப்பாளர் என பன்முக திறமையை கொண்டவர். இயக்குனர் கே.பாலச்சந்தர் இயக்கிய டூயட் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு பிரகாஷ்ராஜ் அறிமுகமானார். 

மேலும் இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, மராத்தி போன்ற பலமொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவரது நடிப்பு திறமைக்காக தேசிய விருது உட்பட பல விருதுகளை வாங்கி இருக்கிறார். இவர் பல முன்னணி நடிகர்களுடன் தொடர்ந்து நடித்து வரும் நிலையில், சமீபத்தில் விருமன் படத்தில் நடித்திருந்தார். 

இப்படத்தில் அதிதி சங்கர், கார்த்தி, சூர்யா உட்பட பிரபலங்களும் நடித்திருந்தனர். இப்படம் கடந்த ஆகஸ்ட் 12-ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இவர் நடிப்பை தாண்டி அரசியலிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். 

மேலும், இவர் சமூக நலன் சார்ந்த பணிகள் என பல பணிகளில் கவனம் செலுத்தி வரும் நிலையில், பிரதமர் மோடி குறித்தும், மத்திய ஆளும் பாஜக அரசு குறித்தும் கடுமையான விமர்சனங்களை முன் வைத்துள்ளார். மேலும் நடிகர் பிரகாஷ்ராஜ் பாஜகவை கடுமையாக சாடியுள்ள பதிவு சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பாலியல் குற்ற வழக்கில் சிக்கி விடுதலையான 11 பேரின் புகைப்படத்தை பதிவிட்டு, "தலைவர்கள் தங்கப்பதக்கம் வென்றவர்கள், வாழ்த்துவதில் மும்முரம் காட்டி அவர்களை சேர்ந்தவர்கள் பாலியல் குற்றவாளிகளுக்கு மாலை அணிவித்து வாழ்த்தி வருகின்றனர்" என்றும் பதிவிட்டுள்ளார். 

இவரது இந்த பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில், நடிகர் சித்தார்த்தும் இந்த விவகாரம் குறித்து, "பாலியல் குற்றவாளி மிருகங்களை விடுவித்து மலர் தூவி வரவேற்றுள்ளனர், 75 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் தங்கள் சொந்த நாட்டில் பாதுகாப்பற்றவர்கள் என்று கூற யாருக்கும் அனுமதி இல்லை" எனவும் பதிவிட்டுள்ளார்.