"என் கணவர் மீண்டும் என்னை பார்க்க வந்தார்" மறைந்த நடிகர் மாரிமுத்துவின் மனைவி கண்ணீர் பேட்டி!
"என் கணவர் மீண்டும் என்னை பார்க்க வந்தார்" மறைந்த நடிகர் மாரிமுத்துவின் மனைவி கண்ணீர் பேட்டி!
கவிஞர் வைரமுத்துவிடம் உதவியாளராக இருந்தவர் மாரிமுத்து. பின்னர் இயக்குனர் வசந்த்திடம் உதவி இயக்குனராக சேர்ந்த இவர், வசந்த் இயக்கிய "ஆசை" உள்ளிட்ட சில படங்களில் பணியாற்றியுள்ளார். பின்னர் இயக்குனராக களம் இறங்கினார் மாரிமுத்து.
நடிகர் பிரசன்னா நடித்து வெளியான "கண்ணும் கண்ணும்" என்ற திரைப்படம் மாரிமுத்து இயக்கியது தான். தொடர்ந்து "புலிவால்" படத்தை இயக்கிய இவர், பிறகு படம் இயக்குவதை நிறுத்திவிட்டு, நடிக்க ஆரம்பித்தார். மிஷ்கினின் "யுத்தம் செய்" படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார் மாரிமுத்து.
பரியேறும் பெருமாள், ஜெயிலர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள இவர் தற்போது இந்தியன் 2விலும் நடித்திருப்பதாகத் தெரிகிறது. திடீரென்று மாரடைப்பால் இறந்த மாரிமுத்துவின் நினைவேந்தல் நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது.
அதில் கலந்துகொண்ட மாரிமுத்துவின் மனைவி, "வாய் பேச முடியாத நபர் ஒருவர், என் கணவர் இறந்த செய்தி கேட்டு எங்கள் வீட்டிற்கு வந்திருந்தார். அவருக்கு உணவு வழங்கி ஊருக்கு அனுப்பிவிட்டேன். அவருக்கு இப்படியொரு ரசிகரா என்று நினைத்து மகிழ்சியாக இருந்தது. என் கணவரே என்னை பார்க்க வந்தது போல் இருந்தது" என்று நெகிழ்ச்சியாக கூறி கண் கலங்கினார்.