பேரதிர்ச்சி.. எதிர்நீச்சல் புகழ் பிரபல நடிகர் திடீர் மரணம்.! சோகத்தில் கலங்கிய ரசிகர்கள்!!

பேரதிர்ச்சி.. எதிர்நீச்சல் புகழ் பிரபல நடிகர் திடீர் மரணம்.! சோகத்தில் கலங்கிய ரசிகர்கள்!!



actor-marimuthu-passed-away

இயக்குனரும் நடிகருமான மாரிமுத்து இன்று காலை திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு பெற்ற தொடர் எதிர்நீச்சல். இத்தொடரில் ஆதி குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தவர் நடிகர் மாரிமுத்து. இந்த தொடரில் இவரது எதார்த்தமான நடிப்பு, வசனங்கள் மக்கள் மத்தியில் பெருமளவில் ரீச்சானது.

அதிலும் இவர் பேசும் "ஏய் இந்தாம்மா" என்ற டயலாக் ட்ரெண்டாகி இவருக்கென தனி அடையாளத்தையே ஏற்படுத்திக் கொடுத்தது. நடிகர் மாரிமுத்து பல திரைப்படங்களில் முக்கிய குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் ரஜினி நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’  படத்திலும் அவர் முக்கிய ரோலில் நடித்துள்ளார்.

marimuthu

இந்நிலையில் அவர் இன்று காலை எதிர்நீச்சல் சீரியலுக்காக டப்பிங் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்துள்ளார். பதறிப்போன அங்கிருந்தவர்கள் உடனே அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு நடிகர் மாரிமுத்து மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவரது இறப்புச் செய்தி ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பலரும் அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.