நேர்கொண்ட பார்வை படம் பார்க்க சென்ற அபிராமி- அங்கு என்ன நடந்தது தெரியுமா?
நேர்கொண்ட பார்வை படம் பார்க்க சென்ற அபிராமி- அங்கு என்ன நடந்தது தெரியுமா?
பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 3. ஏறக்குறைய 60 நாட்களை நெருங்கிவிட்ட நிலையில் பிக்பாஸ் பட்டத்தை வெல்லப்போவது யார் என ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்புடன் உள்ளனர். 16 பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் பாத்திமா பாபு, வனிதா, மோகன் வைத்யா, மீரா, ரேஷ்மா, சரவணன்,சாக்ஷி, அபிராமி என 8 போட்டியாளர்கள் கடந்த நாட்களில் வெளியேற்றப்பட்டனர்.
இந்நிலையில் வனிதாவின் ரீ என்ட்ரிக்கு பிறகு பிக்பாஸ் இல்லம் சண்டை காட்சிகளுக்கு பஞ்சம் இல்லமல் நகர்கிறது. இதன் விளைவாக நடிகை மதுமிதா தற்கொலை முயற்சி மேற்கொண்டதால் பிக்பாஸ் இல்லத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
இந்நிலையில் தற்போது வெளி வந்த அபிராமி தொடர்ந்து வீடியோ மற்றும் ட்வீட்களை போட்டு வருகிறார். தற்போது தான் நடித்த நேர் கொண்ட பார்வை படத்தை பார்த்து விட்டு வரும் போது ரசிகர்கள் அவரை சூழ்ந்து போட்டோ எடுப்பதை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Watched #NerKondaPaarvai Yesterdaty Evening #Famithabanu ❣️ pic.twitter.com/qpm8n5KuzL
— Abhirami Venkatachalam (@AbhiramiVenkat_) August 20, 2019