'உங்களை ஏமாற்றியதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்'.. 2018 பட இயக்குனர் உருக்கம்.!

'உங்களை ஏமாற்றியதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்'.. 2018 பட இயக்குனர் உருக்கம்.!



2018 movie director apology to fans

கடந்த ஆண்டு மலையாளத்தில் வெளியான 2018 திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த திரைப்படத்தை இயக்குனர் ஜூட் ஆண்டனி இயக்கியிருந்தார். மேலும் இந்த படத்தில் டோமினோ தாமஸ், லால், நரேன் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் நடித்திருந்தனர்.

இந்த திரைப்படம் சுமார் 20 கோடிக்கு மேல் வசூல் செய்து மலையாள சினிமாவின் அதிகபட்ச வசூல் செய்த படமாக சாதனை படைத்தது. இதனையடுத்து இந்தியாவின் சார்பில் ஆக்கருக்கு செல்லும் படமாக இந்திய அரசு அறிவித்திருந்தது.

2018

இதனையடுத்து ரசிகர்கள் பலரும் இந்த படத்தின் படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்திருந்தனர். இதனிடையே இந்தப் படத்தை அமெரிக்காவில் பிரமோட் செய்யும் வகைகள் தெற்கு அமெரிக்காவில் 400 திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய ஏற்பாடு செய்தனர்.

இந்த நிலையில் தற்போது ஆஸ்கர் விருதின் பட்டியலில் இருந்து 2018 திரைப்படம் வெளியேறியுள்ளது. இறுதி நாமினேஷன் சுற்றுக்கு கூட இந்த படம் செல்லவில்லை என்பது இந்திய சினிமா ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக அமைந்துள்ளது.

 

இந்த நிலையில் இது குறித்து பேசிய 2018 படத்தின் இயக்குனர் பேசியதாவது, 'இது வருந்தத்தக்கது. உங்களை ஏமாற்றியதற்காக நான் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இந்தப் போட்டியில் நம் நாட்டை பிரதிநிதித்துவப்படுத்த எனக்கு கிடைத்த வாய்ப்பை என் வாழ்நாள் முழுவதும் நினைத்து பெருமிதம் கொள்வேன். என்னை இந்த பயணத்துக்கு தேர்ந்தெடுத்த இறைவனுக்கு நன்றி. அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்' எனக் கூறியுள்ளார்.