இதையே தீர்க்க முடியாத கமலஹாசன்.! அதை எப்படி தீர்த்து வைப்பார் கடுகடுத்த வி.ஜே. வைஷு.!

இதையே தீர்க்க முடியாத கமலஹாசன்.! அதை எப்படி தீர்த்து வைப்பார் கடுகடுத்த வி.ஜே. வைஷு.!



V.j.vaishu criticism about biggboss and kamal

தற்போது நடந்து வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரதீப்க்கு ரெட் கார்டு வழங்கப்பட்ட து இன்றளவும் சமூக வலைதளங்களில் விவாதிக்கப்படும் ஒரு நிகழ்வாக இருந்து வருகிறது. இந்த சூழ்நிலையில் தான் 20 பேர் கொண்ட ஒரு வீட்டை நிர்வாகம் செய்ய இயலாத கமலஹாசனுக்கு தமிழகம் அல்லது இந்தியாவை கொடுத்தால் அவர் எவ்வாறு நிர்வகிப்பார் என்று விமர்சனம் செய்திருக்கிறார்.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஜோவிகா, பூரணிமா மாயா உள்ளிட்டோர் பிக் பாஸ் வீட்டிற்குள் பிரதீபால் தங்களுக்கு பாதுகாப்பின்மை உணர்வு ஏற்படுகிறது என்று தெரிவித்து குரலெழுப்பியதால், பிரதீப் தரப்பு நியாயத்தை விசாரிக்காமலேயே அவரை ரெட்கார்டு கொடுத்து வெளியே அனுப்பி வைத்தார் அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கமல்ஹாசன்.

இந்த சமூகத்திற்கு பிறகு பிக்பாஸ் வீட்டிலும் சரி, சமூக வலைதளங்களிலும் சரி பிரதீப்புக்கு  ஆதரவு அதிகரித்த நிலையில், பலரும் பிக்பாஸ் மற்றும் அதன் தொகுப்பாளர் கமல்ஹாசனை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். அந்த விதத்தில், சென்ற சில நாட்களாக சமூக வலைதளங்களில் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடர்பாக விமர்சனம் செய்து வரும் நடிகை வி.ஜே. வைஷு பிரதீப் விவகாரத்தை சுமுகமான முறையில் தீர்த்து வைக்க முடியாத கமல்ஹாசனிடம் நாட்டை கொடுத்தால் என்ன நடக்கும்? என்று கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார்.

Bigg boss

சென்ற சில தினங்களுக்கு முன்னால் மரியாதை கொடுத்தால் தான் திரும்ப மரியாதை கிடைக்கும் என்று கமல்ஹாசன் தெரிவித்தார். இதை பொதுவான ஒரு பார்வையாளராக இருந்து பார்க்கும்போது, எனக்கு ஒரு கேள்வி எழுகின்றது. இவர் நியாயமானவர், தனி கட்சி நடத்துகிறார், ஒரு 20 பேரை வைத்து சபையை நடத்தி சரியான முறையில் ஒரு ஆணுக்கான பிரச்சனைக்கு தீர்வு காண இயலாமல், சில பெண்கள் தெரிவித்தார்கள் என்பதற்காக அவரை வெளியே அனுப்பி விட்டார்.

இப்படிப்பட்ட நபரிடம் இந்தியாவை கொடுத்தால் ஆணாதிக்கம் அதிகமாக காணப்படும். இதனால் கமல்ஹாசன் போன்ற தொகுப்பாளரிடம் போவதை விட்டுவிட்டு எதிர்காலத்தில் சிம்பு போல உள்ள நபர்களுக்கு வழங்கலாம். தெலுங்கில் நாகார்ஜுனா, ஹிந்தியில் சல்மான்கான் உள்ளிட்டோர் சிறப்பாக இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்கள்.

Bigg boss

அவர்கள் அனைவரும் சிறப்பாக இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும்போது உங்களுக்கு மட்டும் என்ன வந்தது? நீங்கள் தான் உலக நாயகனாச்சே நீங்கள் பல விஷயங்களை யோசிக்கும் ஒரு நபர், நல்ல நடிகர், நீங்கள் ஏன் இதை தட்டி கேட்க கூடாது?

 நீங்கள் உள்ளே அனுப்பிவிட்டு ரெக்கார்டு உங்கள் விருப்பமா? என்று கேட்டால், அவர்கள் அதைத்தான் தூக்குவார்கள். அதே போல மாயா, தான் ஒரு பெண் என்பதை பயன்படுத்தி ஒரு கேமில் ஆணோட வாழ்க்கையை கெடுத்து விட்டார் என்று தெரிவித்துள்ளார்.