ஐயோ... வெள்ளத்தில் அடித்து சென்று 24 மணி நேரம் சேற்றில் போராட்டம்! அதிசயமாக உயிருடன் மீட்கப்பட்ட 25 இளம்பெண்.... மறுபுறம் காத்திருந்த அதிர்ச்சி! பகீர் காட்சி...!!!
நேபாளத்தில் பெருவெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 25 வயது பெண், 24 மணி நேரத்துக்கும் மேலான தேடுதலுக்குப் பிறகு சேற்றில் இருந்து உயிருடன் மீட்கப்பட்டார்.
நேபாளத்தில் ஏற்பட்ட கோர வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்ட 25 வயது இளம்பெண், 24 மணி நேரத்துக்கும் மேலான தேடுதலுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்டார். வெள்ளநீர் அவரை வெகுதூரம் இழுத்துச் சென்ற நிலையில், மீட்புக் குழுவினர் தொடர்ந்து தேடுதல் நடத்தினர்.
வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இளம்பெண்
கனமழையால் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருந்த நிலையில், அந்தப் பெண்ணும் வெள்ளநீரில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டார். அதன்பிறகு அவரைப் பற்றிய எந்தத் தகவலும் கிடைக்காததால், உறவினர்கள் மற்றும் மீட்புக் குழுவினர் கவலையடைந்தனர்.
இதையும் படிங்க: நேபாளத்தை உலுக்கிய பனிப்பாறை முறிவு! பயங்கர எச்சரிக்கையில் சிக்கிம்... ஆபத்தான 16 ஏரிகளில் நவீன சென்சார்கள்!!! இமயமலைப் பேரழிவின் பின்னணி..!!!
24 மணி நேரத்துக்கு பிறகு உயிருடன் மீட்பு
தகவலின்படி, தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த மீட்புக் குழுவினர், சேற்றுக்குள் சிக்கியிருந்த பெண்ணை கண்டுபிடித்தனர். அங்கு மிகுந்த சிரத்தையுடன் செயல்பட்டு, அவரை பாதுகாப்பாக வெளியே கொண்டு வந்தனர். நீண்ட நேரம் வெள்ளத்தில் சிக்கியிருந்த போதிலும் அவர் உயிருடன் மீட்கப்பட்டது நிம்மதியை ஏற்படுத்தியது.
பெற்றோரை இழந்த பெரும் சோகம்
எனினும், உயிர் தப்பிய பெண்ணுக்கு காத்திருந்தது மற்றொரு பெரும் துயரம். நேபாளத்தில் ஏற்பட்ட இந்த இயற்கைப் பேரிடரில் அவரது பெற்றோர் இருவரும் உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருபுறம் வெள்ளத்தில் இருந்து மீட்பு கிடைத்த மகிழ்ச்சி இருந்தாலும், மறுபுறம் பெற்றோரை இழந்த நிலையில் அவர் நிற்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நேபாள வெள்ளப்பெருக்கு பல குடும்பங்களை பாதித்துள்ள நிலையில், இந்த மீட்பு நிகழ்வு அப்பகுதியில் கவனம் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: வெள்ளத்துக்கு நடுவே குடும்பத்தைக் காப்பாற்ற ஓடிய வாலிபர்! திக் திக் காட்சி..!!!