தேனிலவுக்கு சென்ற புதுமண தம்பதிக்கு நேர்ந்த விபரீதம்! 1 மணி நேரமாக தீயில் கதறிய புதுப்பெண்... ஹோட்டல் நிர்வாகத்தின் அலட்சியம்! நடுங்க வைக்கும் காட்சி...!!!
மேற்கு வங்கத்தின் குர்சியாங் அருகே ஹோம்பேக் பால்கனியில் பார்பிகியூ சமைத்தபோது தீப்பற்றி புதுமணப்பெண் நிகிதா படுகாயமடைந்தார்.
மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் மாவட்டம் குர்சியாங்கிற்கு உட்பட்ட சித்தோங் பகுதியில், தேனிலவுக்காக சென்ற புதுமணத் தம்பதிக்கு எதிர்பாராத அதிர்ச்சி ஏற்பட்டது. ஹோம்பேக் பால்கனியில் பார்பிகியூ முறையில் உணவு சமைத்தபோது திடீரென தீ பரவியது. இதில் புதுமணப்பெண் நிகிதா பலத்த தீக்காயங்களுக்கு உள்ளானார்.
சோப்ரா பகுதியைச் சேர்ந்த அந்தத் தம்பதி, சித்தோங் பகுதியில் உள்ள ஹோம்பேக்கில் தங்கியிருந்ததாக கூறப்படுகிறது. அங்கு பால்கனியில் உணவு தயாரித்துக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக தீ கட்டுப்பாட்டை இழந்து நிகிதா மீது கொழுந்துவிட்டு எரிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
பால்கனியில் தீப்பற்றி புதுமணப்பெண் படுகாயம்
தீக்காயங்களுடன் நிகிதா பால்கனியிலேயே அலறித் துடித்ததாக அவரது கணவர் தெரிவித்துள்ளார். மேலும், ஹோம்பேக் நிர்வாகத்தினரும் ஊழியர்களும் உடனடியாக உதவ முன்வரவில்லை என்றும், ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அவரை கைவிட்டுச் சென்றதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
தீயில் சிக்கிய நிகிதாவுக்கு சரியான நேரத்தில் உதவி கிடைக்காதது குறித்து அவரது கணவர் வேதனையுடன் புகார் தெரிவித்துள்ளார். தீ எவ்வாறு பரவியது, அப்போது அங்கு இருந்தவர்கள் என்ன நடவடிக்கை எடுத்தனர் என்பதும் விசாரணையின் முக்கிய அம்சங்களாக உள்ளன.
ஹோம்பேக் நிர்வாகத்திடம் போலீசார் விசாரணை
தகவல் கிடைத்ததும் உள்ளூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். ஹோம்பேக் தீ விபத்து தொடர்பாக நிர்வாகத்தின் செயல்பாடுகள் மற்றும் கூறப்படும் அலட்சியம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அங்கிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளையும் போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர். தீப்பற்றிய நேரம் முதல் நிகிதாவுக்கு உதவி கிடைத்ததாக கூறப்படும் நேரம் வரை நடந்தவற்றை காட்சிகள் மூலம் உறுதி செய்யும் பணியும் நடைபெற்று வருகிறது.
புதுமணத் தம்பதியின் தேனிலவு பயணம் திடீரென சோகத்தில் முடிந்துள்ள நிலையில், நிகிதாவுக்கு ஏற்பட்ட தீக்காயங்கள் தொடர்பான மேலதிக மருத்துவ நிலவரம் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. சித்தோங் போலீஸ் விசாரணை முடிவில் தீ விபத்துக்கான காரணமும், பொறுப்புக்குரியவர்கள் குறித்த விவரங்களும் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.