தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தண்ணீரில் விஷம்?.. பெண்ணுக்கு நேர்ந்த சோகம்.. கதறும் குடும்பத்தினர்.!!

தண்ணீரில் விஷம்?.. பெண்ணுக்கு நேர்ந்த சோகம்.. கதறும் குடும்பத்தினர்.!!

Women dies suicide in virudhunagar Advertisement

கால் வலியால் அவதிப்பட்ட பெண்மணி மனமுடைந்து தண்ணீரில் வேதிப்பொருள் கலந்து உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், உண்மையான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி, லிங்கபுரம் காலனி பகுதியில் வசித்து வருபவர் முருகன். இவரின் மனைவி ராஜலட்சுமி (வயது 54). ராஜலட்சுமிக்கு அடிக்கடி கால் வலி ஏற்பட்டு வந்த நிலையில், பல இடங்களுக்கு சென்று சிகிச்சை பெற்றும் சரிவர குணமாகவில்லை என கூறப்படுகிறது. 

விஷமருந்தி மயங்கி கிடந்த பெண்?

இதனால் மனமுடைந்தவர் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத போது காப்பர் சல்பேட் வேதிப்பொருளை தண்ணீரில் கலந்து குடித்து மயங்கி கிடந்ததாக கூறப்படுகிறது. வீட்டுக்கு வந்தவர்கள் மயக்கத்தில் இருந்த ராஜலட்சுமியை எழுப்ப முயற்சித்த நிலையில், எழும்பாததால் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

இதையும் படிங்க: நீட் தேர்வு அச்சத்தால் மாணவி தூக்கிட்டு தற்கொலை.. தொடரும் சோகம்.!!

suicide

சிகிச்சை பலனின்றி பரிதாப பலி :
 
பின் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட பெண்மணி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக தகவலறிந்த சிவகாசி கிழக்கு காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

போலீசார் விசாரணை :

மேலும் பெண்மணி தானாகவே தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது அவரது உணவில் யாராவது வேதிப்பொருள் கலந்து கொலை அரங்கேற்றப்பட்டதா? என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

இதையும் படிங்க: "ஜூஸில் போதை மருந்து..." பள்ளி மாணவர்கள் பலாத்காரம்.!! இளைஞர் கைது.!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#suicide #women died #Poison #விருதுநகர் #Virudhunagar
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story