நீட் தேர்வு அச்சத்தால் மாணவி தூக்கிட்டு தற்கொலை.. தொடரும் சோகம்.!!
நீட் தேர்வு அச்சத்தால் மாணவி தூக்கிட்டு தற்கொலை.. தொடரும் சோகம்.!!

இந்தியா முழுவதும் 22 லட்சம் மாணவர்கள் கலந்து கொள்ளும் நீட் நுழைவு தேர்வு இன்று நடைபெற்று வருகிறது. மாணவர்கள் பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் சோதனைக்கு பின்னர் தேர்வு மையங்களுக்குள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நீட் தேர்வு அச்சம்
இதனிடையே செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம் பகுதியைச் சேர்ந்த மாணவி நீட் தேர்வு அச்சத்தில் தற்கொலை செய்துள்ளார். மாணவி கயல்விழி மாடம்பாக்கத்தில் உள்ள நீட் தேர்வு மையத்தில் இன்று தனது தேர்வை எழுத இருந்தார்.
இதையும் படிங்க: வயிற்றுப்புண்ணுக்கு நிரந்தர தீர்வு.. ருசியான ஆட்டுக்குடல் குழம்பு செய்வது எப்படி?
போலீஸ் விசாரணை
இந்த நிலையில், நீட் தேர்வின் மீது இருந்த பயத்தின் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: கத்தரி வெயிலை நினைச்சு கவலைப்படாதீங்க.. அடுத்த 2 நாட்களுக்கு 10 மாவட்டங்களை குளிர்விக்க வரும் கோடை மழை.!!