×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மகிழ்ச்சி செய்தி! கடன் முழுவதும் தள்ளுபடி.... சற்றுமுன் முதல்வர் விஜய் அறிவித்த அதிரடி அறிவிப்பு!!!

பயிர்க்கடன் தள்ளுபடி கோரி விவசாயிகள் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், கூடுதல் சலுகைகளுடன் புதிய அறிவிப்பை தமிழக அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

தமிழகத்தில் பயிர்க்கடன் தள்ளுபடி தொடர்பாக விவசாயிகள் முன்னெடுத்து வரும் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் தமிழக அரசு புதிய நடவடிக்கைகளை ஆராய்ந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளுக்கு உட்பட்டு, கடன் தள்ளுபடியை மேலும் விரிவுபடுத்துவது குறித்து ஆலோசனைகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

தவெக அரசு தேர்தல் காலத்தில் அளித்த வாக்குறுதிகளின் அடிப்படையில் முழுமையான பயிர்க்கடன் தள்ளுபடி நடைமுறைப்படுத்தப்படவில்லை எனக் கூறி, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அரசுக்கு கூடுதல் அழுத்தம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க: பயிர்க்கடன் தள்ளுபடி திட்டத்தில் புதிய மாற்றம்.... முதல்வர் விஜய் எடுத்த அதிரடி முடிவு..!!!

அரசு மட்டத்தில் தீவிர ஆலோசனை

விவசாயிகளின் அதிருப்தியை குறைக்கும் நோக்கில், சட்ட மற்றும் நிதி அம்சங்களை ஆய்வு செய்து அரசு அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களுக்கு உட்பட்டு, அதிகபட்சமாக எவ்வளவு கடன் தள்ளுபடி வழங்க முடியும் என்பது குறித்து விரிவான பரிசீலனை நடைபெற்று வருவதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ரூ.50 ஆயிரம் திட்டம் மறுபரிசீலனை?

ஏற்கெனவே அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டிருந்த ரூ.50,000 வரையிலான கடன் தள்ளுபடித் திட்டத்தை தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப மறுபரிசீலனை செய்யும் வாய்ப்பும் இருப்பதாக கூறப்படுகிறது. விவசாயிகளின் எதிர்பார்ப்பை கருத்தில் கொண்டு கூடுதல் சலுகைகள் வழங்கும் வகையிலான புதிய திட்டம் உருவாக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிப்பு வெளியாகுமா?

நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரின்போது முதல்வர் விஜய் இந்த விவகாரம் தொடர்பாக முக்கிய அறிவிப்பை வெளியிடலாம் என்ற எதிர்பார்ப்பு அரசியல் மற்றும் விவசாய வட்டாரங்களில் நிலவி வருகிறது. இதனால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளிடையே புதிய நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் உருவாகியுள்ளது.

 

இதையும் படிங்க: ஷாக் நியூஷ்! மகளிர் உரிமைத் தொகையில் தகுதியற்றவர்களின் பட்டியல் நீக்கம்..... இனி ரூ.2500 யாருக்கெல்லாம் கிடைக்கும்.? அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்..!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#பயிர்க்கடன் தள்ளுபடி #TVK Government #Tamil Nadu Farmers #விவசாயிகள் போராட்டம் #Crop Loan Waiver
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story