வெயிலின் தாக்கத்தால் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பு..? வெளியான முக்கிய அறிவிப்பு..!!!
தமிழகத்தில் கடும் வெயில் மற்றும் வெப்ப அலை காரணமாக பள்ளிகள் திறப்பதை ஒரு வாரம் தள்ளிவைக்க அரசு ஆலோசனை நடத்தலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் வெயிலின் தாக்கம் காரணமாக, பள்ளிகள் திறப்பதை மேலும் ஒரு வாரம் தள்ளிப்போட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மாணவர்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அரசு முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது மாநிலம் முழுவதும் பல இடங்களில் வெப்பநிலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், பள்ளிகளை உடனடியாக திறப்பது மாணவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தக்கூடும் என்ற கவலை எழுந்துள்ளது. இதனால் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: குட் நியூஷ்! விரைவில் மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500.. நாளை வங்கி கணக்கில் வரும் பணம்! முதல்வர் விஜய்யின் அதிரடி அறிவிப்பு!!!
அரசுக்கு தனியார் பள்ளிகள் அவசர கோரிக்கை
இந்த சூழலில், பள்ளித் திறப்பை ஒத்திவைக்க வேண்டும் என்று தனியார் பள்ளிச் சங்கங்களின் கூட்டமைப்பு தமிழக அரசுக்கு அவசரக் கடிதம் அனுப்பியுள்ளது. குறிப்பாக காலை மற்றும் மதிய நேரங்களில் நிலவும் கடும் வெயில் காரணமாக மாணவர்கள் பாதிக்கப்படக்கூடும் என அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், கோடை வெப்பம் குறையும் வரை பள்ளிகள் திறப்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும், மாணவர்களின் பாதுகாப்பே முதன்மை எனவும் அந்த அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.
அண்டை மாநிலங்களில் வெப்ப அலை பாதிப்பு
இதற்கிடையே, ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா மற்றும் ஒடிசா மாநிலங்களில் நிலவி வரும் தீவிர வெப்ப அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. தகவலின்படி, ஒரே நாளில் 62 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையை கவனத்தில் கொண்டுள்ள தமிழக அரசு, மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பள்ளிகள் திறக்கும் தேதியை மாற்றுவது குறித்து விரைவில் முடிவு எடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பும் பெற்றோர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: உச்சக்கட்ட எதிர்பார்பில் மக்கள்! மகளிர் உரிமைத்தொகையில் தமிழக அரசு அதிரடி மாற்றம்.! அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு.!!!