ஓய்வூதியத் தொகை தாமதம் குறித்து தமிழக அரசு அளித்த அதிரடி விளக்கம்...!!!
தமிழகத்தில் ஆகஸ்ட் மாத சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியத் தொகை தாமதம் குறித்து அரசு விளக்கம் அளித்துள்ளது. செப்டம்பர் 14 முதல் தொகை விரைவாக வழங்கப்படும்.
தமிழகத்தில் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் ஓய்வூதியம் பெற்று வரும் பயனாளிகளுக்கான ஆகஸ்ட் மாதத் தொகை வரவு வைப்பதில் ஏற்பட்ட தாமதம் குறித்து அரசு விளக்கம் அளித்துள்ளது. 35.37 லட்சத்துக்கும் அதிகமானோர் பயன்பெறும் நிலையில், ஏற்கனவே 15,56,674 பேரின் வங்கிக் கணக்குகளில் தொகை செலுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்களுக்கு புதிய நிதிப் பரிவர்த்தனை நடைமுறை காரணமாக தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
15.56 லட்சம் பேருக்கு ஓய்வூதியம் வரவு
தமிழகத்தின் 12 வகையான சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் மூலம் முதியோர், மாற்றுத்திறனாளிகள், விதவைகள், கணவனால் கைவிடப்பட்டவர்கள், வேளாண் தொழிலாளர்கள் உள்ளிட்ட நலிவுற்ற பிரிவினர் மாதந்தோறும் ஓய்வூதியம் பெற்று வருகின்றனர். ஆகஸ்ட் 2026 மாதத்துக்கான ஓய்வூதியத் தொகை, செப்டம்பர் மாதத்தில் வழங்கப்பட வேண்டிய நிலையில், 15,56,674 பயனாளிகளுக்கு ஏற்கனவே நேரடியாக வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: புரோட்டா மாஸ்டரின் பூட்டிய வீட்டுக்குள் வீசிய துர்நாற்றம்! 3 நாட்கள் சடலத்துடன் வீட்டில்.... வெளிவந்த அதிர்ச்சி பின்னணி!!!!
புதிய SNA-SPARSH நடைமுறையால் தாமதம்
மத்திய அரசின் பங்களிப்புடன் செயல்படும் இந்திரா காந்தி தேசிய முதியோர், விதவையர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியத் திட்டங்களின் கீழ் சுமார் 19,20,858 பேர் பயன்பெறுகின்றனர். இவர்களுக்கான தொகையை இந்த மாதம் முதல் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ள SNA-SPARSH நிதிப் பரிவர்த்தனை தளம் மூலம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான பயனாளிகள் பட்டியல் மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது.
செப்டம்பர் 14 முதல் பணம் செலுத்த நடவடிக்கை
செப்டம்பர் 11 முதல் 14-ம் தேதி வரை மத்திய அரசு அலுவலகங்களுக்கு தொடர் விடுமுறை இருப்பதால், பட்டியலுக்கு ஒப்புதல் பெறுவதில் தாமதம் ஏற்பட்டதாக அரசு தெரிவித்துள்ளது. இதனால் பயனாளிகள் அச்சப்பட தேவையில்லை என்றும், செப்டம்பர் 14 முதல் நிலுவையில் உள்ள தொகையை விரைவாக வங்கிக் கணக்குகளில் செலுத்துவதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அரசு உறுதி அளித்துள்ளது. இதேவேளையில், ஓய்வூதியத் தொகை கிடைக்காத பயனாளிகள் அடுத்தடுத்த நாட்களில் வரவு வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: போடு வெடிய... ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு ரூ.3000, வேட்டி, சேலை....! அமைச்சர் சொன்ன சூப்பர் குட் நியூஸ்...!!!