ஆசிரியைக்கு பாலியல் தொல்லை.. உதவி தலைமை ஆசிரியர் அதிரடி கைது.!
ஆசிரியைக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது செய்யப்பட்டார்.
உடன் பணியாற்றி வரும் சகஆசிரியைக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக உதவி தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
உதவி தலைமை ஆசிரியர்:
தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவில், காந்தி நகரில் வசித்து வருபவர் பஞ்சராஜா (வயது 56). இவர் சங்கரன்கோவில், பெரியகோவிலான்குளம் அரசு உயர்நிலைப்பள்ளியில், உதவி தலைமை ஆசிரியராக இருக்கிறார்.
இதையும் படிங்க: Thoothukudi News: 15 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. சிலம்பம் ஆசிரியர் போக்ஸோவில் கைது.. பெற்றோர்களே கண்காணிங்க..!
பாலியல் தொல்லை:
இதே பள்ளியில் ஆசிரியையும் பணியாற்றி வரும் நிலையில், பஞ்சராஜா ஆசிரியைக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இந்த விஷயம் குறித்து ஆசிரியை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
விசாரணை:
இந்த புகாரின் பேரில் அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய நிலையில், ஆசிரியைக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது. இதனையடுத்து, உதவி தலைமை ஆசிரியர் பஞ்சராஜா அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
இதையும் படிங்க: 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. காவல்துறை அதிகாரி போக்ஸோவில் அதிரடி கைது.!