குடிபோதையில் விபத்தை ஏற்படுத்திய தலைமை காவலர்.! மனஉளைச்சலில் எடுத்த பயங்கரமான முடிவு!!
குடிபோதையில் விபத்தை ஏற்படுத்திய தலைமை காவலர்.! மனஉளைச்சலில் எடுத்த பயங்கரமான முடிவு!!

சென்னை தரமணி காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்தவர் செந்தில்குமார். இவர் நேற்று கிண்டி மடுவின்கரை மேம்பாலம் மீது காரில் சென்றுள்ளார். அப்பொழுது கார் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியுள்ளது. அதில் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த முருகேசன் என்பவர் பாலத்தில் இருந்து கீழே விழுந்து பலத்த காயமடைந்தார்.
மதுபோதையில் விபத்து
காவலர் செந்தில் விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்றுள்ளார். அவரை பொதுமக்கள் விரட்டி சென்று கத்திபாரா மேம்பாலம் அருகே பிடித்துள்ளனர். பின்னர் அவரை கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். அப்பொழுது காவலர் செந்தில் மது போதையில் இருந்துள்ளார். பின் போலீசார் விசாரணை மேற்கொண்டு செந்தில் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அடுத்தக்கட்ட விசாரணைக்கு வர வேண்டும் என அவரிடம் எழுதி வாங்கிக் கொண்டு அனுப்பி வைத்துள்ளனர்.
தீயிட்டு தற்கொலை
இதற்கிடையில் விபத்து தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலானது. இதனால் மனஉளைச்சலில் இருந்த தலைமைக்காவலர் செந்தில்குமார் இன்று காலை சென்னை தரமணி ரயில் நிலையம் அருகே பெட்ரோல் கேனுடன் வந்து, திடீரென தன்மீது பெட்ரோலை ஊற்றி பற்ற வைத்துக் கொண்டுள்ளார். இதுகுறித்து அங்கிருந்தவர்கள் போலீசாருக்கு தகவலளித்த நிலையில் மருத்துவ குழுவுடன் அங்கு விரைந்த அவர்கள் பரிசோதனை மேற்கொண்டதில் செந்தில்குமார் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. பின்னர் அவரது உடலை மீட்ட அவர்கள் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: அரசு பேருந்து - கார் நேருக்குநேர் மோதி கோரவிபத்து.. 4 பேர் பலி.!!
இதையும் படிங்க: தண்ணீரில் விஷம்?.. பெண்ணுக்கு நேர்ந்த சோகம்.. கதறும் குடும்பத்தினர்.!!