தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சொன்னது நடக்கல.. குறி சொன்ன சாமியாடிக்கு அரிவாள் வெட்டு.!! 

சொன்னது நடக்கல.. குறி சொன்ன சாமியாடிக்கு அரிவாள் வெட்டு.!! 

men try to kill the men who told daughter in law and son problem solve soon Advertisement

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கண்டிகை பகுதியில் வசித்து வருபவர் மணிகண்டன். இவர் வளையல் வியாபாரி ஆவார். தீவிர ஆன்மீக பக்தரான இவர் அங்குள்ள சுடலை மாடசாமி கோவிலில் சாமியாடியாகவும் இருந்து வருவதாக கூறப்படுகிறது. 

மகன் - மருமகள் சண்டை

இவரிடம் முறப்பநாடு பகுதியைச் சேர்ந்த மலையாண்டி என்பவர் தனது மகன் மற்றும் மருமகள் எப்போதும் சண்டையிட்டு கொண்டிருப்பதாகவும், அவர்கள் எப்போது சேருவார்கள் எனவும் கேட்டுள்ளார். இதனை தொடர்ந்து மணிகண்டன் விரைவில் அவர்கள் சேர்ந்து விடுவார்கள் என்று கூறியதாக தெரிய வருகிறது. 

இதையும் படிங்க: நெல்லையில் பயங்கரம்... காதல் விவகாரத்தில் இளைஞர் கொலை.!! 3 சிறுவர்கள் கைது.!!

fight

குறி சொன்னது ஏன் நடக்கல?

ஆனால் அவர் சொன்ன குறி நடக்காததால் ஆத்திரமடைந்த மலையாண்டி, சாமியாடியான மணிகண்டனிடம் நேரில் சென்று நியாயம் கேட்டுள்ளார். அப்போது இருதரப்பினருக்கும் வாக்குவாதம் உண்டாகிய நிலையில், மணிகண்டனை அவர் அறிவாளால் வெட்டி இருக்கிறார். 

போலீஸ் விசாரணை

தற்போது மணிகண்டன் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ள நிலையில், காவல்துறையினர் இந்த விஷயம் குறித்து விசாரணை செய்து மலையாண்டியை தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: பட்டன் பிரச்சனையில் கலங்கி நின்ற நீட் தேர்வு மாணவி.! உதவிக்கரம் நீட்டிய பெண் காவலர்.!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#fight #murder attempt #tirunelveli #திருநெல்வேலி
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story