×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

"நண்பனின் மனைவியுடன் கள்ளக்காதல்..." மரக்கடை அதிபர் வெட்டி கொலை.!!

நண்பனின் மனைவியுடன் கள்ளக்காதல்... மரக்கடை அதிபர் வெட்டி கொலை.!!

Advertisement

சென்னை அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதட்டத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக காவல் நிலையத்தில் சரணடைந்த, சுதாகர் ராஜ் என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை அருகேயுள்ள நன்மங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் மகேஸ்வரன். 40 வயதான இவர் மரக்கடை நடத்தி வந்தார். இவரது மனைவி பராசக்தி. பாண்டிச்சேரியைச் சேர்ந்த சுதாகர் ராஜ் என்பவர் மகேஸ்வரனுக்கு நண்பனாக இருந்திருக்கிறார். இந்நிலையில் சுதாகர் ராஜுக்கும், மகேஸ்வரனின் மனைவி பராசக்திக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக மனைவி மற்றும் நண்பனை மகேஸ்வரன் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சுதாகர் ராஜ் சம்பவம் நடந்த தினத்தன்று மகேஸ்வரனை பின்தொடர்ந்து வந்து வெட்டி கொலை செய்துள்ளார். இதன் பிறகு சேலையூர் காவல் நிலையத்தில் சரணடைந்தார். இதனையடுத்து அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் கைது செய்தனர்.

இதையும் படிங்க: அண்ணியுடன் முறை தவறிய காதல்... இளைஞர் படுகொலை.!! அண்ணன் கைது.!!

மேலும் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று கொலை செய்யப்பட்ட மகேஸ்வரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். கள்ளக்காதல் விவகாரத்தில் உடன் பழகிய நபரை வெட்டி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

இதையும் படிங்க: வீட்டு வாசலில் பயங்கரம்... அடகு கடை அதிபர் குத்தி கொலை.!! மர்ம நபர் வெறி செயல்.!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#tamilnadu #chennai #Crime #Murder #Illicit Relationship
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story