×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

நண்பனுக்கு கடைசியாக அனுப்பிய மெசேஜ்! பெற்ற தாயை நண்பனிடம் ஒப்படைத்துவிட்டு உயிரை மாய்துக்கொண்ட கல்லூரி மாணவன்..! அதிர்ச்சி சம்பவம்..!!!

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே கல்லூரி மாணவர் சுரேஷ் நண்பருக்கு உருக்கமான குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு தூக்கிட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே கல்லூரி மாணவர் ஒருவர் நண்பருக்கு உருக்கமான குறுஞ்செய்தி அனுப்பிய சில நிமிடங்களிலேயே உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் வடக்கு இலந்தைக்குளம் பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

நண்பருக்கு அனுப்பிய கடைசி குறுஞ்செய்தி

வடக்கு இலந்தைக்குளத்தைச் சேர்ந்த பிச்சையின் மகன் சுடலைமுத்து என்ற சுரேஷ், தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், தனது ஊரைச் சேர்ந்த நண்பரின் செல்போனுக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். அதில், “என்னுடைய அம்மாவை நல்லா பார்த்துக்கோங்க...” என்று குறிப்பிட்டிருந்ததாக கூறப்படுகிறது.

அதன்பின், சுரேஷ் தனது வீட்டிலேயே தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குடும்பப் பிரச்சினை அல்லது மன அழுத்தம் காரணமாக இந்த முடிவை எடுத்திருக்கலாம் என ஆரம்பகட்டத்தில் சந்தேகிக்கப்படுகிறது.

இதையும் படிங்க: பள்ளியில் மகனால் தேர்வு எழுத முடியாது! மன உளைச்சலில் தாய் எடுத்த விபரீதமான முடிவு! வீட்டுக்கு வந்த கணவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!

பதறிய நண்பர் வீட்டிற்கு விரைந்தார்

குறுஞ்செய்தியை பார்த்த நண்பர் அதிர்ச்சியடைந்து உடனடியாக சுரேஷின் வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கு அவர் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதைக் கண்டு உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

காவல்துறை தீவிர விசாரணை

தகவலின்படி, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கயத்தாறு காவல்துறை அதிகாரிகள் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப் பதிவு செய்து, மாணவர் உயிரிழப்புக்கான உண்மையான காரணம் என்ன என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இளம் வயதில் கல்லூரி மாணவர் உயிரிழந்த இந்த நிகழ்வு வடக்கு இலந்தைக்குளம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

இதையும் படிங்க: சிவகங்கையில் ஆடு மேய்க்கச் சென்ற 12 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்! மாலையில் ஆடுகள் மட்டும் திரும்பிய நிலையில்.... மாணவியை தேடிய பெற்றோர்கள்! ஊருணித் தண்ணீரில் கண்ட அதிர்ச்சி...!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Kayathar #தூத்துக்குடி #college student #தற்கொலை #police investigation
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story